என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை
- கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
- ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஞானசேகரனிடமிருந்து செல்போனை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீசார் முதன்மையானதாக கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின்போது பல கோணங்களில் அவரை பேச வைத்து குரலை பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.






