என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்த பீர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட்.
    • இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.

     ரஷிய பீர் பிராண்ட் ஒன்று தனது பீர் கேன்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்த பீர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட்[Rewort]. மகாத்மா காந்தி உருவம் பொறித்த இந்த பீர் கேன்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பீர் கேன்களில் அதில் மகாத்மா G என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

    மது அருந்துவதற்கு எதிரான தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இழைக்கப்பட்ட அவமானம் இதுவென்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, இந்த பீர் கேன்களில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை அகற்றுமாறு பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார்.
    • படத்தின் முதல் பாடலான பீர் சாங் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார்.

    அடுத்ததாக அவரது 'டீசல்' படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    'டீசல்' படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான பீர் சாங் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.

    இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாடல் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    • 25.2.2025 செவ்வாய்க் கிழமை முதல் 1.3.2025- சனிக் கிழமை வரை 5 நாட்கள் பொதுக்கூட்டங்கள்.
    • கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதிமுகவின் காவல் தெய்வம் அம்மாவின் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 25.2.2025 செவ்வாய்க் கிழமை முதல் 1.3.2025- சனிக் கிழமை வரை 5 நாட்கள், 'ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்து பேசினார்.
    • ஆதாயம் இருக்கமானால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள்.

    கோவை விமான நிலையத்தில் வைத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

    குறிப்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. நான் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டனர். மானுடத்தை கொன்றுவிட்டு மதத்தை தூக்கி நிறுத்துவதா? கைக்கூலி, ஓட்டுப்பிச்சை என்று கூறுவதா?, ஆதாயம் இருக்கமானால் எல்லோரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்துங்கள்.

    அனைவரும் பிரபாகரன் படத்தை பயன்படுத்த வேண்டுமென்றே இவ்வளவு நாள் நான் போராடினேன் என்று கூறினார்.

    மேலும் மயிலாடுதுறை இரட்டை கொலைக்கு முன் விரோதமே காரணம் என போலீசார் கூறுவது வேதனையளிக்கிறது, எப்படியாவது இந்த அரசை பாதுகாக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்று தெரிவித்தார். 

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் 'அமரன்'.
    • கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்தது.

    கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது. இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தமிழ் நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

    சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்திருந்தனர்.

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இத்திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைபயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் இதுவரை 335 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், 'அமரன்' படம் வெளிவந்து 100 நாட்களை தாண்டிய நிலையில், படத்தின் வெற்றிவிழாவை படக்குழு நேற்று கொண்டாடினர். இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற ஹே மின்னலே பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    • கல்வி, பாரம்பரியமான பட்டு வகைகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.
    • தொடர்ந்து 10 நாட்கள் நிகழ்ச்சி நடக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. 3-வது ஆண்டாக இந்த ஆண்டு இன்று மாலையில் தொடங்கியது.

    தொடக்க விழாவில் உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரிகள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து 10 நாட்கள் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் 80 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கல்வி, கலாச்சாரம், மொழியின் பெருமை, கைத்தொழில்கள், பாரம்பரியமான பட்டு வகைகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன. விற்பனை, கண்காட்சி, செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படும்.

    இந்த ஆண்டு தமிழ் முனிவரான அகத்தியரை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதற்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் அகத்தியரின் சிலை இடம் பெற்றுள்ளது. மேலும் அவரை பற்றிய புத்தகங்கள், ஓலை சுவடிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


    மேலும் தமிழகத்தின் பெருமைக்குரிய பெரியவர்கள் பலரை பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டு உள்ள அரங்கில் திருவள்ளுவர், அவ்வையார், காரைக்கால் அம்மையார், தில்லையாடி வள்ளியம்மை, முத்து லெட்சுமி ரெட்டி, வீரமங்கை வேலுநாச்சியார், எம்.எஸ்.சுவாமிநாதன், சி.வி.ராமன், டாக்டர் அப்துல்கலாம், ஜி.டி.நாயுடு உள்பட பலரது புகைப்படங்கள் அவர்களது சிறப்புகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

    தமிழ் திரையுலக பிரபலங்கள் வரிசையில் நடிகர் அஜித்குமார், இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகு மான், விஜய் சேதுபதி, மறைந்த சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

    வாரணாசியில் முகாமிட்டுள்ள மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.சந்திரசேகரன் கூறியதாவது:-

    தமிழ் மொழியின் பெருமை, இலக்கியங்களின் வளமை ஆகியவற்றை நாடு முழுவதும் எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு திருக்குறளும், தொல்காப்பியமும் இந்தியில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.

    இந்த ஆண்டு 41 சங்க இலக்கிய நூல்களை இந்தியில் மொழி பெயர்த்து இன்று வெளியிடுகிறோம்.

    முக்கியமாக யூடியூப் சானல் மூலம் இந்தி வழியாக தமிழை கற்றுக் கொள்ளும் பயிற்சி வகுப்பும் இன்று தொடங்கப்பட்டது. ரூ.300 கட்டணம் செலுத்த இந்தி பயிற்சி வகுப்பில் சேரலாம். 90 நாட்கள் வகுப்பு நடக்கும். இதில் சேருபவர்களுக்கு இந்தி மூலம் 30 நாளில் தமிழில் பேச, எழுத, படிக்க முடியும் என்ற 2 தொகுதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

    இதன் மூலம் இந்தி பேசும் வட மாநில மக்கள் இனிமையான தமிழ் மொழியை எளிதில் கற்றுக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    • வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை ஏற்று 75,000 அரசு ஊழியர்கள் வெளியேற சம்மதித்துள்ளனர்.
    • அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    அமெரிக்க அரசு நிறுவனங்களில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார். இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார்.

    அரசின் தேவையற்ற செலவுகளை டிரம்புக்கு சுட்டிக்காட்டும் வேலையை DODGE செய்து வருகிறது. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் அதிரடியாக முடக்கினார் டிரம்ப்.

    இந்த நிலையில்தான் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் டிரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.

    அந்த வகையில் உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பதாகவும், அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இதுவரை, வேலைக்கு சேர்ந்து முதல் ஆண்டு Probation காலத்தில் உள்ள ஊழியர்கள் இந்த பணிநீக்கத்துக்கு இலக்காகி உள்ளனர். சுமார் 10,000 ஊழியர்களுக்கு ஏற்கனவே பணிநீக்கத்துக்கான உத்தரவு துறை ரீதியாக அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மையங்களில் உள்ள Probation ஊழியர்களில் பாதி பேர் மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிசக்தித் துறையில் சுமார் 1,200 முதல் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் 325 ஊழியர்களும் அடங்குவர்.

    அமெரிக்க வனத்துறை சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. அதே நேரத்தில் தேசிய பூங்காக்கள் சேவை நிறுவனம், சுமார் 1,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

     

    வரிகளை வசூலிக்கும் உள்நாட்டு வருவாய் சேவை நிறுவனம், அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பருவகால தீயணைப்பு வீரர்களை பணியமர்த்துவதையும், காடுகளில் இருந்து காய்ந்த மரம் போன்ற தீபற்றும் ஆபத்து கொண்டவற்றை அகற்றும் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மேலும் வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை டிரம்ப் மற்றும் மஸ்க் அறிவித்த நிலையில் அதை ஏற்றுக்கொண்டு வெளியேற 75,000 அரசு ஊழியர்கள் சம்மதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பணிநீக்கத்துக்கு எதிராக பல்வேறு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    • மருங்கூர் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    • சங்கறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும், இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

    தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    "விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை" - 2441

    பண்டைக் காலத்தில் அரம் போன்ற சிறு கருவிகளைக் கொண்டு சங்கினை அறுத்து அணிகலன்கள் செய்ததைக் குறிப்பிடுகிறது சீவக சிந்தாமணி பாடல்.

    இதற்குச் சான்றாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஒரு பகுதியாகும்.

    இதுவரை இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இரும்புப் பொருட்கள், இராசராச சோழன் காலத்துச் செப்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரௌலட்டட் பானை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் இந்த பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும், இப்பகுதி மக்கள் அந்த தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியுள்ளதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

    தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கான மேலுமொரு சான்று கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

    இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    • சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

     

    இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

     

    இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 17-ந் தேதி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு

    • பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நேற்று மாலை வரை 50 கோடி பக்கதர்கள் புனித நீராடியுள்ளனர்.
    • பல கி.மீ. தூரம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

    மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் தொடங்கியது முதல் தினந்தோறும் லட்சணக்கான மக்கள் புனித நீராடி வருகிறார்கள்.

    நேற்று மாலை வரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். மொத்தம் 45 நாட்கள் விழாவான மகா கும்பமேளா வருகிற 26-ந்தேதி நிறைவடைகிறது.

    பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாகனங்கள் பல மைல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படுகிறது. அவர்களால் புனித நீராட முடியுமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக மகா கும்பமேளா விழாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு அகிலேஷ் யாதவ் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "இதற்கு முன்னதாக மகா கும்பமேளா, கும்பமேளா 75 நாட்கள் வரை கடைபிடிக்கப்பட்டது. தற்போது நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.

    தற்போது லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியாது. இந்த சூழ்நிலையில் அரசு மகா கும்பமேளா விழா நாட்களை நீட்டிக்க வேண்டும்" என்றார்.

    பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கூட்டம் அலைமோதும் நிலையில், பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் மக்கள் ஏற முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜ் ரெயில் நிலையம் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாலையில் பல கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் தத்தளித்து நிற்கிறது.

    கடந்த மாதம் பிரயாக்ராஜியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை உ.பி. அரசு மறைக்கிறது என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்த கானா படத்திலும் சஜனா நடித்திருந்தார்.
    • அண்ணா, என் கிரிக்கெட் கிட் முழுவதுமாக முடிந்துவிட்டது. எனக்குப் புதிய ஸ்பைக்குகள் தேவை என்று கேட்டேன்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனை சஜீவன் சஜனா நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி குறித்து பேசியுள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். கேரள பழங்குடியினத்தை சேர்ந்த சஜனாவின் தந்தை ஆட்டோ ஓட்டுனர். பொருளாதர சவால்களை கடந்து சாதித்த வீராங்கனையாக சஜனா விளங்குகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்த கானா படத்திலும் சஜனா நடித்திருந்தார். 

    தற்போது இஎஸ்பின் ஊடகத்துக்கு பேட்டியளித்த சஜனா, சிவகார்த்திகேயன் சார் எனக்கு போன் செய்து உதவி தேவையா என்று கேட்டார். நான் அவரிடம், 'அண்ணா, என் கிரிக்கெட் கிட் முழுவதுமாக முடிந்துவிட்டது. எனக்குப் புதிய ஸ்பைக்குகள் தேவை என்று கேட்டேன்.

    ஒரு வாரத்திற்குள் எனக்குப் புதிய ஸ்பைக்குகள் கிடைத்தன. அந்த நேரத்தில் நான் சேலஞ்சர் டிராபிக்கும் செல்ல வேண்டியிருந்தது. அங்குள்ள அனைவரும் என் குடும்ப சூழல் பற்றி கேட்பார்கள், அப்போது நான் பதற்றமடைவேன். ஆனால் எல்லோரும் ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தனர் என்று தெரிவித்துள்ளார். 

    • கடந்த ஆண்டு காயத்தின்போது உதவியாளர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை கொடுத்துள்ளனர்.
    • WADA- வின் 3 மாத தடையை ஏற்றுக்கொள்ள சின்னர் ஒப்புக் கொண்டதால் தடை அமலுக்கு வந்துள்ளது.

    உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இத்தாலியின் ஜெனிக் சின்னர் இருந்து வருகிறார். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்படைத்தார்.

    இவருக்கு கடந்த மாதம் கைவிரலில் காயம் ஏற்பட்டது. காயம் உடனடியாக குணமடைய அவருக்கு உதவியாளர்கள் க்ளொஸ்டெபோல் (Clostebol) என்ற ஊக்கமருந்தை கொடுத்துள்ளனர். சின்னருக்கு இது தடைசெய்யப்பட்டது என்பது தெரியாமல் உட்கொண்டுள்ளார்.

    உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) கடந்த வருடம் மார்ச் மாதம் பரிசோதனை மேற்கொண்டபோது க்ளொஸ்டெபோல் பயன்படுத்தியது தெரியவந்தது. இரண்டு முறை சோதனை மேற்கொண்டபோது பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது.

    இதனால் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு சின்னருக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு அமைப்பில் (International Tennis Integrity Agency) மேல்முறையீடு செய்தார். அப்போது தற்செயலாக சின்னருக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் தண்டனை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்தது.

    இதை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் WADA மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் WADA-வின் தண்டனையை ஏற்றுக்கொள்ள சின்னர் முடிவு செய்தார். இதனால் டென்னிஸ் போட்டியில் கடந்த 9-ந்தேதியில் இருந்து மே 4-ந்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளியில் சின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாது.

    சின்னர் தடையை ஏற்றுக்கொண்டதால் WADA விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் இருந்து வழக்கை வாபஸ வாங்க இருக்கிறது.

    இந்த தடைக்காலம் சின்னரின் பிரெஞ்ச் ஓபனை பாதிக்கிறது. இவரது தடைக்காமல் மே 4-ந்தேதி முடிவடையும் நிலையில், பிரெஞ்ச் ஓபன் மே 25-ந்தேதி தொடங்குகிறது.

    ×