என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நேற்று மாலை வரை 50 கோடி பக்கதர்கள் புனித நீராடியுள்ளனர்.
- பல கி.மீ. தூரம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் தொடங்கியது முதல் தினந்தோறும் லட்சணக்கான மக்கள் புனித நீராடி வருகிறார்கள்.
நேற்று மாலை வரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். மொத்தம் 45 நாட்கள் விழாவான மகா கும்பமேளா வருகிற 26-ந்தேதி நிறைவடைகிறது.
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாகனங்கள் பல மைல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படுகிறது. அவர்களால் புனித நீராட முடியுமா? என்று தெரியவில்லை.
இந்த நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக மகா கும்பமேளா விழாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என உத்தர பிரதேச அரசுக்கு அகிலேஷ் யாதவ் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "இதற்கு முன்னதாக மகா கும்பமேளா, கும்பமேளா 75 நாட்கள் வரை கடைபிடிக்கப்பட்டது. தற்போது நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது லட்சக்கணக்கான மக்கள் புனித நீராட விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியாது. இந்த சூழ்நிலையில் அரசு மகா கும்பமேளா விழா நாட்களை நீட்டிக்க வேண்டும்" என்றார்.
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கூட்டம் அலைமோதும் நிலையில், பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்களில் மக்கள் ஏற முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜ் ரெயில் நிலையம் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாலையில் பல கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் தத்தளித்து நிற்கிறது.
கடந்த மாதம் பிரயாக்ராஜியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை உ.பி. அரசு மறைக்கிறது என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்த கானா படத்திலும் சஜனா நடித்திருந்தார்.
- அண்ணா, என் கிரிக்கெட் கிட் முழுவதுமாக முடிந்துவிட்டது. எனக்குப் புதிய ஸ்பைக்குகள் தேவை என்று கேட்டேன்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனை சஜீவன் சஜனா நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி குறித்து பேசியுள்ளார்.
பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். கேரள பழங்குடியினத்தை சேர்ந்த சஜனாவின் தந்தை ஆட்டோ ஓட்டுனர். பொருளாதர சவால்களை கடந்து சாதித்த வீராங்கனையாக சஜனா விளங்குகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்த கானா படத்திலும் சஜனா நடித்திருந்தார்.

தற்போது இஎஸ்பின் ஊடகத்துக்கு பேட்டியளித்த சஜனா, சிவகார்த்திகேயன் சார் எனக்கு போன் செய்து உதவி தேவையா என்று கேட்டார். நான் அவரிடம், 'அண்ணா, என் கிரிக்கெட் கிட் முழுவதுமாக முடிந்துவிட்டது. எனக்குப் புதிய ஸ்பைக்குகள் தேவை என்று கேட்டேன்.
ஒரு வாரத்திற்குள் எனக்குப் புதிய ஸ்பைக்குகள் கிடைத்தன. அந்த நேரத்தில் நான் சேலஞ்சர் டிராபிக்கும் செல்ல வேண்டியிருந்தது. அங்குள்ள அனைவரும் என் குடும்ப சூழல் பற்றி கேட்பார்கள், அப்போது நான் பதற்றமடைவேன். ஆனால் எல்லோரும் ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டு காயத்தின்போது உதவியாளர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை கொடுத்துள்ளனர்.
- WADA- வின் 3 மாத தடையை ஏற்றுக்கொள்ள சின்னர் ஒப்புக் கொண்டதால் தடை அமலுக்கு வந்துள்ளது.
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இத்தாலியின் ஜெனிக் சின்னர் இருந்து வருகிறார். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்படைத்தார்.
இவருக்கு கடந்த மாதம் கைவிரலில் காயம் ஏற்பட்டது. காயம் உடனடியாக குணமடைய அவருக்கு உதவியாளர்கள் க்ளொஸ்டெபோல் (Clostebol) என்ற ஊக்கமருந்தை கொடுத்துள்ளனர். சின்னருக்கு இது தடைசெய்யப்பட்டது என்பது தெரியாமல் உட்கொண்டுள்ளார்.
உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) கடந்த வருடம் மார்ச் மாதம் பரிசோதனை மேற்கொண்டபோது க்ளொஸ்டெபோல் பயன்படுத்தியது தெரியவந்தது. இரண்டு முறை சோதனை மேற்கொண்டபோது பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது.
இதனால் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு சின்னருக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு அமைப்பில் (International Tennis Integrity Agency) மேல்முறையீடு செய்தார். அப்போது தற்செயலாக சின்னருக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் தண்டனை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்தது.
இதை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் WADA மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் WADA-வின் தண்டனையை ஏற்றுக்கொள்ள சின்னர் முடிவு செய்தார். இதனால் டென்னிஸ் போட்டியில் கடந்த 9-ந்தேதியில் இருந்து மே 4-ந்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளியில் சின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாது.
சின்னர் தடையை ஏற்றுக்கொண்டதால் WADA விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் இருந்து வழக்கை வாபஸ வாங்க இருக்கிறது.
இந்த தடைக்காலம் சின்னரின் பிரெஞ்ச் ஓபனை பாதிக்கிறது. இவரது தடைக்காமல் மே 4-ந்தேதி முடிவடையும் நிலையில், பிரெஞ்ச் ஓபன் மே 25-ந்தேதி தொடங்குகிறது.
- இரண்டு வாரங்களுக்கு பின் , மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் இறந்தார்.
- 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக்சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர்
உலக பணக்காரர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜோசுவா ரூபின் என்பவரது 'வைட் அவேக் பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்ற எரோல் மஸ்க் பேசியதாவது, ஒபாமா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவர் பெண்ணாக உடையணிந்த ஒரு ஆணை மணந்தார் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜோசுவா ரூபின் உடனே, "மிஷெல் ஒபாமா ஒரு ஆண் தானா?" என்று கேட்டபோது, எரோல், "நிச்சயமாக, அது உங்களுக்குத் தெரியாதா?" என்று பதிலளித்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டில் நகைச்சுவை நடிகர் ஜான் ரிவர்ஸ், மிச்செல் ஒபாமாவை திருநங்கை என்றும், பராக் ஒபாமா 'ஒரு ஓரினச்சேர்க்கையாளர்' என்றும் பேசியிருந்தார். அதற்கு இரண்டு வாரங்களுக்கு பின் , மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் செப்டம்பர் 4, 2014 அன்று இறந்தார்.
இதை குறிப்பிட்டு பேசிய எரோல் மஸ்க், "ஜான் ரிவர்ஸ் அதைப் பற்றிப் பகிரங்கமாகக் பேசினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்துகிடந்தார். அவர்கள் அவரை வெட்டிக் கொன்றார்கள்" என்று கூறினார்.

மேலும் " நிச்சயமாக மிஷேல் ஒபாமா ஒரு ஆண்தான். 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக்சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர்" என்று எரோல் மஸ்க் தெரிவித்தார்.
- வயநாடு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு 529.90 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
- கொடுத்த கடன் தொகை முழுவதையும் மார்ச் 31-ந்தேதிக்குள் பயன்படுத்த கண்டிசன் விதித்துள்ளது.
வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை தேசிய பேரிடர் என அறிவித்து சீரமைப்பு பணிக்காக நிதி வழங்க வேண்டும் கேரள அரசு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது என மத்திய அறிவித்ததுடன் நிதி ஒதுக்கவில்லை.
இந்த நிலையில் சீரமைப்பிற்காக 529.90 கோடி ரூபாய் கேரள மாநில அரசுக்கு மத்திய அரசு கடன் வழங்கியது. ஆனால் மத்திய அரசு விதித்துள்ள கண்டிசன் பயங்கரமானது, கொடூரமான நகைச்சுவையானது என கேரள மாநில வருவாய் அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே. ராஜன் கூறுகையில் "கடனின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள கண்டிசன் பயங்கரமானவை. அடுத்த 45 நாட்களுக்குள் மொத்த பணத்தையுடம் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மார்ச் 31-ந்தேதிக்குள் பயன்படுத்த வேண்டும். இது கொடூரமான நகைச்சுவை.
பிரதமர் மோடி வயநாடு வருகை தந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது மறுசீரமைப்பு பணிக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி கூறியபோது, எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் கடன் மட்டுமே மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்துவதைவிட எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.
நிதியமைச்சர் கே.என. பாலகோபால் "மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து பணத்தையும் பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய செயல்முறை சிக்கலாகும்" என்றார்.
- "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?
- ரன்வீருக்கு ஆதரவாக முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மகன் அபிநவ் சந்திரசூட் நீதிமன்றத்தில் வழக்காட உள்ளார்.
பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா கேட்ட கேள்வி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் India's Got Tatent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்.
இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் அறிவித்தார். இதன்பின் ரன்வீர் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்.
ரன்வீருக்கு ஆதரவாக முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மகன் அபிநவ் சந்திரசூட் நீதிமன்றத்தில் வழக்காட உள்ளார்.
இந்நிலையில் "மகாபாரதம்" சீரியலில் பீமனாக நடித்த முன்னாள் WWE மல்யுத்த வீரர் சவுரவ் குர்ஜார், ரன்வீருக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "ரன்வீரை போன்றவர்கள் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டனர். நான் அவனை எங்கேயாவது சந்தித்தால், யாரும் அவனை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது" என்று மிரட்டியுள்ளார்.
- ராம் லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி என்ற இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
- 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சுரங்கத் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலக்கரி எடுத்துச் செல்லும் கனரக லாரி ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் நேற்று [வெள்ளிக்கிழமை] பிற்பகல் 3 மணியளவில் மாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமிலியா காட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.
ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி என்ற இருவர் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அந்த கனரக லாரி மோதி கவிழ்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இருவர் உயிரிழந்த செய்தியறிந்த உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டக்காரர்கள் தொழிற்சாலை பகுதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அதற்குள் அங்கு வந்து அவர்களை கலைத்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- 'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
- திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.
'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான மாயா மாயா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விவேகா வரிகளில் விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பயணக் கைதிகளை விடுவிக்கும் வகையில் 6 வார போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
- இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால், பணயக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என மிரட்டல் விடுத்திருந்தது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 21 பேரை விடுதலை செய்திருந்தனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று 3 பேரை விடுதலை செய்ய ஹமாஸ் முடிவு செய்திருந்தது. ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் திட்டமிட்டபடி சனிக்கிழமை (இன்று) பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது என ஹமாஸ் மிரட்டல் விடுத்தது.
இதற்கிடையே சனிக்கிழமைக்குள் அனைத்து பயணக் கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால காசாவில் நரகம வெடிக்கும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டு காசா மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனால் திட்டமிட்டபடி சனிக்கிழமை (இன்று) 3 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கடந்த வியாழக்கிழமை ஹமாஸ் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. லெய்ர் ஹோர்ன் (46), சாகுய் தெகெல் சென் (36), அலெக்சாண்டர் (சஷா) டிரௌபனவ் (29) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
லெய்ர் ஹோர்ன் இஸ்ரேல் மற்றும் அர்ஜென்டினா குடியுரிமை கொண்டவர். சாகுய் தெகெல் சென் இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஆவார். அலெக்சாண்டர் இஸ்ரேல் மற்றும் ரஷியா குடியுரிமை கொண்டவர். இந்த மூன்று பேருடன் மொத்த 24 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் நம்புகிறது.
- சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
- திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் 8 நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் இதுவரை 95.20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவு
- குந்தி குரு திடீரென ரிக்ஷாவில் வந்து இறங்கி புன்னகையுடன், 'நீங்க என்ன பண்றீங்க' என்று கேட்டார்.
- பூரி-சப்ஜி மற்றும் அவரது பதின்மூன்றாவது நாள் துக்க கூட்டத்திற்காகத் இனிப்புகள் தயாரிக்கப்பட்டன
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அம்மாநில பாஜக அரசு மறைப்பதாக சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அன்று நடந்த கூட்டநெரிசலில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட ஒருவர் உயிருடன் தனது வீட்டுக்கு சென்று அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிரயாக்ராஜை சேர்ந்த உள்ளூர்வாசியான 60 வயது முதியவர் குந்தி குருவுக்கு குடும்பம் இல்லை. அவர் தனியாக வசிக்கிறார்.
மௌனி அமாவாசையின்போது குளிப்பதற்காக, ஜனவரி 28 ஆம் தேதி மாலையில் குந்தி குரு திரிவேணி சங்கமத்திற்குச் சென்றிருந்தார். ஜனவரி 29 அன்று நடந்த கூட்டநெரிசல் சம்பவத்திலிருந்து அவரை காணவில்லை.
உள்ளூர் சமூக சேவகர் அபய் அவஸ்தி கூறுகையில், கூட்ட நெரிசலுக்குப் பிறகு, நாங்கள் அவரை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக, அவர் இறந்துவிட்டதாகக் கருதி, பிப்ரவரி 11 ஆம் தேதி அவரது ஆன்மா சாந்தியடைய ஒரு சிறிய பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். அதன் பிறகு பிராமணர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது, குந்தி குரு திடீரென ரிக்ஷாவில் வந்து இறங்கி புன்னகையுடன், 'நீங்க என்ன பண்றீங்க' என்று கேட்டார்.
குந்தி குரு உயிருடன் இருப்பதைக் கண்டு, அவரது அண்டை வீட்டார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், பூரி-சப்ஜி மற்றும் அவரது பதின்மூன்றாவது நாள் துக்க கூட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் அவர் திரும்பியதைக் கொண்டாட உள்ளூர்வாசிகளிடையே விநியோகிக்கப்பட்டன.
இவ்வளவு நாட்களாக அவர் காணாமல் போனது குறித்த கேள்விக்கு, குந்தி குரு, சாதுக்கள் குழுவுடன் சேர்ந்து புகைத்தேன். இதன் காரணமாக அவர் நீண்ட நேரம் தூங்கினேன். இதன் பிறகு நாக சாதுக்களின் முகாமுக்குச் சென்றதாகக் கூறினார். மேலும் அவர்களின் கடைகளில் உணவு பரிமாறும் சேவை செய்தேன் என்று அப்பாவியாகத் தெரிவித்தார்.
- பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு சில நாட்களாக வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ரங்கம்மா பாடல் வெளியாகியுள்ளது. இதில் சாண்டி மாஸ்டர் மற்ரும் ரியோ இணைந்து ஆடியுள்ளனர். இப்பாடலை தெருகுரல் அறிவு பாடியுள்ளார். பாடல் மிகவும் வைபாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






