நிலச்சரிவு மறுசீரமைப்பிற்காக ரூ. 530 கோடி கடன்: மத்திய அரசின் கண்டிசன் கொடூரமானவை- என கேரள அமைச்சர் விமர்சனம்

வயநாடு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு 529.90 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.கொடுத்த கடன் தொகை முழுவதையும் மார்ச் 31-ந்தேதிக்குள் பயன்படுத்த கண்டிசன் விதித்துள்ளது.
நிலச்சரிவு மறுசீரமைப்பிற்காக ரூ. 530 கோடி கடன்: மத்திய அரசின் கண்டிசன் கொடூரமானவை- என கேரள அமைச்சர் விமர்சனம்
Published on

வயநாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதம் திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். நிலச்சரிவால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை தேசிய பேரிடர் என அறிவித்து சீரமைப்பு பணிக்காக நிதி வழங்க வேண்டும் கேரள அரசு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் தேசிய பேரிடர் என அறிவிக்க முடியாது என மத்திய அறிவித்ததுடன் நிதி ஒதுக்கவில்லை.

இந்த நிலையில் சீரமைப்பிற்காக 529.90 கோடி ரூபாய் கேரள மாநில அரசுக்கு மத்திய அரசு கடன் வழங்கியது. ஆனால் மத்திய அரசு விதித்துள்ள கண்டிசன் பயங்கரமானது, கொடூரமான நகைச்சுவையானது என கேரள மாநில வருவாய் அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கே. ராஜன் கூறுகையில் "கடனின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள கண்டிசன் பயங்கரமானவை. அடுத்த 45 நாட்களுக்குள் மொத்த பணத்தையுடம் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மார்ச் 31-ந்தேதிக்குள் பயன்படுத்த வேண்டும். இது கொடூரமான நகைச்சுவை.

பிரதமர் மோடி வயநாடு வருகை தந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது மறுசீரமைப்பு பணிக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி கூறியபோது, எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் கடன் மட்டுமே மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்துவதைவிட எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.

நிதியமைச்சர் கே.என. பாலகோபால் "மார்ச் 31-ந்தேதிக்குள் அனைத்து பணத்தையும் பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய செயல்முறை சிக்கலாகும்" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com