என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.
மலையாள இயக்குனரான அருண் டி ஜோஸ் அடுத்ததாக ப்ரோமான்ஸ் {Bromance} திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான ஜோ அண்ட் ஜோ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் மிக நகைச்சுவையான கதைக்களத்தில் அமைந்துள்ளது.
படத்தின் முதல் பாதி சிறு தொய்வாக இருந்தாலும். படத்தின் இரண்டாம் பாதி நகைச்சுவை காட்சிகளும், விறுவிறு திரைக்கதையை கொண்டு அதை சரிக்கட்டியுள்ளனர். சங்கீத் பிரதாபின் நகைச்சுவை காட்சிகளில் திரையரங்குகள் சிரிப்பலையில் அதிருகிறது.
ப்ரோமான்ஸ் திரைப்படத்தில் அர்ஜுன் அசோகன், மாத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை அருண், ரவீஷ் நாத் மற்றும் தாமஸ் இணைந்து எழுதியுள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ், படத்தொகுப்பை சமான் சாக்கோ மற்றும் இசையை கோவிந்த் வசந்தா மேற்கொண்டுள்ளனர். ப்ரோமான்ஸ் திரைப்படத்தை ஆசிக் உஸ்மான் தயாரித்துள்ளார்.
திரைப்படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் 4 நாட்களில் 11.78 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
- 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம் பெறுவது குறித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை நடத்தியது.
முன்னணி நடிகரான விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மாவட்ட நிர்வாகிகளை நியமித்த விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்நிலையில் 2026 தேர்தலுக்கான சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி உள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து பேசினார். 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம் பெறுவது குறித்த தமிழ்நாடு முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை நடத்தியது.
2026 சட்டசபை தேர்தலுக்கான கட்சி பணிகளில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
- சுப்ரீம் கோர்ட் இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியது.
- மற்ற மூத்த வக்கீல்கள் சார்பில் வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.
புதுடெல்லி:
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு கடந்த 10-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் ஆஜராகி, எழுத்து மூலமான வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியது.
எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழ்நாடு அரசு வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மற்ற மூத்த வக்கீல்கள் சார்பில் வாதங்கள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.
- மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
- இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், பிரயாக்ராஜ் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை அதிகளவில் இருக்கும் ஆற்றில் நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் புனித நீராடி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு இவர்களது தயாரிப்பில் வெளியான கோட் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்பெற்றது.
- அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் டிராகன் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம். கடந்த ஆண்டு இவர்களது தயாரிப்பில் வெளியான கோட் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப்பெற்றது.
அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ள டிராகன் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இது இவர்கள் தயாரிக்கும் 26- வது திரைப்படமாகும்.
இதை தொடர்ந்து இந்தியில் லயன் மற்றும் சிம்பு நடிக்கும் 51 - வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவர் அடுத்து தயாரிக்கும் திரைப்படத்தை பற்றி சில தகவலை கூறியுள்ளார்.
அதில் அவர் அடுத்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் நடிகர் சிவகார்த்திகேயன் வைத்து திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அப்படத்தை பெரிய பிரபல இயக்குனர் இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார். யார் அந்த இயக்குனர் என்ற தகவல் வெளியாகவில்லை. அது இயக்குனர் வெங்கட் பிரபு வாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
- இந்திய அணி முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்திய வீரர் கள் துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இருக்கிறார். இந்த நிலையில் மோர்னே மோர்கலின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து மோர்கல் உடனடியாக துபாயில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பினார். அவர் மீண்டும் எப்போது அணியுடன் இணைவார் என்ற தகவல் வெளியாகவில்லை. முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இந்தப் போட்டி தொடரில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளார். தற்போது மார்னே மார்கலும் இல்லாதது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
- இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம் என்று கூறி மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
- பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் செயல்பட்டு வரும் கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT) பல்கலைக்கழகத்தில் நேபாள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் பலர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பிரகிருதி லம்சால் என்ற 20 வயது நேபாளை சேர்ந்த மாணவி பல்கலை. விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கலிங்கா பல்கலையில் அவர் மூன்றாம் ஆண்டு பி.டெக் பயின்று வந்தார்.
அதே பல்கலையில் பயின்று வந்த லக்னோவை சேர்ந்த ஆத்விக் ஸ்ரீவஸ்தவா(21 வயது) என்பவரால் பிரகிருதி தொடர்ந்து மன ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இவர் பிரகிருதியின் முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. ஆத்விக்கின் தொடர் தொந்தரவால் மன அழுத்தத்துக்கு ஆளான பிரகிருதி கடந்த மாதமே பல்கலை. மாணவர் மனநல ஆலோசகரிடம் தனது பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அதை அவர்கள் அலட்சியம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அதீத மன அழுத்தம் காரணமாக பிரகிருதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட அதே நாளில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவா வெளியூருக்குத் தப்பியோட விமான டிக்கெட் எடுத்துள்ளதும் அம்பலமானது.

இதற்கிடையே பல்கலையில் பயின்று வந்த நேபாள் நாட்டை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
கடந்த ஒரு மாதமாக, வளாகத்தில் ஒழுக்கமின்மை குறித்து புகார் அளித்து வந்தபோதும் யாரும் பதிலளிக்கவில்லை என்று அம்மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போராடும் நேபாள் மாணவர்களை நிர்வாக அதிகாரிகள் தாக்குவதும், அவர்களை மிரட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
அதில் பெண் ஆசிரியைகள் நேபாள் மாணவர்களை பார்த்து, "உங்களுக்கு ஆண்டு முழுக்க உணவுகளை இலவசமாகப் போடுகிறோம். அதன் விலை மட்டும் ரூ.40 ஆயிரம். இது உங்கள் நாட்டு ஜிடிபியை விட அதிகம்" என்று கூறி அனைவரையும் உடனடியாக பல்கலையை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளனர். மேலும் பல்கலையில் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
நிர்வாகம் தங்களை வலுக்கட்டாயமாக வெளிற்றியுள்ளது என்றும் பயணச்சீட்டுகள் இன்றியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரெயில் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் சகோதரர் அழித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் ஆத்விக் ஸ்ரீவஸ்தவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நேபாள் பிரதமர் சர்மா ஒலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பல்கலை நிர்வாகம் நேபாள மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டி, இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டெல்லியில் உள்ள நேபாள தூதரகம் இரண்டு அதிகாரிகளை அனுப்பியது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஒடிசா பாஜக அரசு தலையிட்டு, மாணவர்களை வெளியே அனுப்பிய KIIT-ஐ அதன் முடிவை மாற்றுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து KIIT பல்கலைக்கழகம் நேபாள மாணவர்கள் திரும்பி வருமாறு வலியுறுத்தி ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.
- இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?
மும்மொழி கொள்கை தொடர்பாக நா.த.க. வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும்.
* கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம். பயன்பாட்டு மொழி ஆங்கிலம் தெளிவாக எழுதி இருக்கிறேன்.
* உலகின் எல்லா மொழிகளும் விருப்ப மொழிகள். இந்தி உட்பட விரும்பினால் கற்போம் என்று போட்டுள்ளேன்.
* இந்தி எனக்கு எதற்காக தேவை என்பதை அண்ணாமலை தெளிவாக கூறுவாரா?
* தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தோர் தமிழ் பேசும் நாகர்கள் என்றார் அம்பேத்கர்.
* தேவை என்றால் இந்தி படிக்கிறோம். உணவு, மொழி, உடை எல்லாம் அங்கங்கு வாழுகின்ற கால சூழல் தான் தீர்மானிக்கும் என்று கூறினார்.
- நீங்கள் விரக்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு, நான் வேதனையின் உச்சியில் இருந்து கேட்கிறேன்.
- இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம், அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம்.
மதுரை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
அம்மா நம்மோடு இருந்த போது இதே தேனி மாவட்டத்தில் இவர் தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, 2010 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு அம்மா இந்த சாமானிய தொண்டரான உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்.
அதே 2010-ம் ஆண்டு இன்றைய எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலே செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிற போது ஓ.பன்னீர் செல்வத்தை தள்ளி வைத்துவிட்டு அம்மா என்னை அந்த செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்குவதற்கு இந்த சாமானிய தொண்டன் உதயகுமாருக்கு ஆணையிட்டார் என்பதும் அந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
கடந்த 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக எனக்கு பணியாற்றுகிற வாய்ப்பு கிடைத்தபோது தலைமைக்கும், இரட்டை இலைக்கும் விசுவாசமாக நான் பணியாற்றி, தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்பு நழுவி போகிற போது தேனி தொகுதியில் இரட்டை இலை மலர்ந்தது.
அதற்கு இந்த சாமானிய தொண்டனின் விசுவாசமான உழைப்பு எப்படி என்பதை நீங்கள் வேண்டுமானால் உங்கள் வசதிக்காக மறந்து இருக்கலாம். நான் விசுவாசத்தோடு இரட்டை இலை சின்னத்திற்காக எப்படி உழைத்தேன் என்பதையும், எப்படி பாடுபட்டேன் என்பதையும் அ.தி.மு.க. தொண்டர்கள் அறிவார்கள்.
அம்மா தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைபாட்டில் தான் சாமானிய தொண்டனான என்னிடம் பகிர்ந்து கொண்டார் என்பதை நான் வெளியே சொன்னால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது.
அம்மாவின் மறு வடிவமாக இருக்கிற எடப்பாடியார் ஆணையிட்டால், இந்த நிமிடமே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், அம்மா பேரவை பொறுப்பு, மாவட்ட செயலாளர், ஏன் சட்டமன்ற உறுப்பினர் என்கிற பொறுப்பணியில் கூட அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக, கட்சியின் வெற்றிக்காக, என்னை தியாகம் செய்ய ஒரு நாளும் தயங்கவில்லை. இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கும் நான் தயங்குபவன் அல்ல?
நான் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஒரு நாளும் ஒருபோதும் ஆசைப்பட்டவன் அல்ல. நான் வகிக்கின்ற இந்த பொறுப்புகள் எல்லாம் விசுவாசத்தோடு நான் பணியாற்றியதற்காக தலைமை என்னை தேடிக் கொடுத்த பதவிகள் தானே தவிர, நான் தேடிப்போய் பெற்ற பதவிகள் அல்ல.
அன்றைக்கு அம்மா இருந்த சமயத்தில், டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள். தயவு செய்து அதை சொல்லுங்கள். நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன்.
ஆகவே தயவு செய்து நீங்கள் ஏதோ ஒரு மூடு மந்திரம் போல என்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை என் கழகப்பணி மீதும், நான் கொண்டுள்ள விசுவாசத்தின் மீதும் நீங்கள் களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,
நீங்கள் விரக்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு, நான் வேதனையின் உச்சியில் இருந்து கேட்கிறேன். எங்களை ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று பிரச்சனையை திசை திருப்பும் பாணியில் நீங்கள் பேசி வருவது ஆண்டவனுக்கே பொருந்தாது. இந்த கோடான கோடி அப்பாவி தொண்டர்களையும், தமிழக மக்களையும் இனியும் நீங்கள் ஏமாற்றக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிலை சொல்கிறேன்.
உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் நீங்கள் போவீர்கள் என்பது தான் சமீபகால நடவடிக்கை. உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னால் பிரச்சனை. இப்போது பிரச்சனை நீங்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான்.
ஏனென்றால் எங்களைப் போன்றவர்கள் அதை நன்றாக அறிவோம். அப்பாவி சாமானிய ஏழை, எளிய தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இந்த உண்மை புரிய வேண்டும். இதை நான் சத்தியமாக தெய்வ சாட்சியாக சொல்கிறேன், அத்தனையும் உண்மை.
வெளியில் இருந்து யாரும் எந்த சோதனையும் ஏற்படுத்தவில்லை. இத்தனை பிரச்சனைகளுக்கும் நீங்கள்தான் காரணம். பா.ஜ.க. கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் நீங்கள் நிற்பதற்கு யார் காரணம்? நீங்கள் பதவி ஆசையினாலே மத்திய அமைச்சராகி விடவேண்டும் என்ற ஆசைதானே காரணம்.
தேனி மாவட்டத்தில் அதிகாரம் தங்கள் பிள்ளைக்கு வேண்டும் என்று தான் நினைத்தீர்களே தவிர, வேறு யாரையாவது உருவாக்கி உள்ளீர்களா? இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம், அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம்.
உங்களுடைய சுயநலத்திற்காக, அதிகாரத்திற்காக நீங்கள் உண்மையை மறைத்து செயல்பட்டீர்கள். அது தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி, நயினார் நாகேந்திரன் வரை உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் கடைபிடித்த பாதை, தர்மம்.
ஆகவே எனக்கு எச்சரிக்கை விடுகிற தகுதி உங்களுக்கு இல்லை. நான் எந்த எச்சரிக்கையையும் எதிர்கொள்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன். இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் நான் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
- எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
"மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1998-ம் ஆண்டு வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நாளை (பிப்ரவரி 19-ம் தேதி) தொடங்கி மார்ச் 9 வரை அங்குள்ள கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்திய அணி பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை இந்த தொடருக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
மார்ச் 2-ம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைகிறது. முதல் அரையிறுதி போட்டி மார்ச் 4-ம் தேதி துபாயிலும், 2-வது அரையிறுதி போட்டி மார்ச் 5-ம் தேதி லாகூரிலும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9-ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டி நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கராச்சியில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வெற்றியுடன் கணக்கை தொடங்கப் போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் முதல் முறையாக ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது. 29 ஆண்டுகளுக்குப பிறகு பாகிஸ்தானில் தற்போது ஐ.சி.சி. போட்டி நடக்கிறது. கடைசியாக 1996-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி இங்கு நடை பெற்றது.
இதன் காரணமாக பாகிஸ்தான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போட்டி மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ளும்.
போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது. படத்திற்கு மதராஸி என தலைப்பு வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் மிகவும் முரட்டு தோற்றத்தில் காணப்படுகிறார்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் மதராஸி திரைப்படத்தை பற்றி சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " மதராஸி படத்தின் படப்பிடிப்பு பணிகள் பெரும்பாலான பகுதி முடிந்துவிட்டது. இன்னும் கிளைமாக்ஸ் பகுதி மட்டும் 12 நாள் படப்பிடிப்பு பண்ண வேண்டும். அனிருத் படத்திற்கான பின்னணி இசையை முடித்துவிட்டார்.
வட இந்தியர்கள் நம் தமிழர்களை எப்படி பார்க்கிறார்கள், நினைக்கிறார்கள் என்பதை வைத்து தான் திரைப்படத்தின் தொடக்கம் அமைந்துள்ளது அதனால் மதராஸி என்ற தலைப்பை வைத்துள்ளோம். இப்படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனை அடுத்த கட்ட ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும். கஜினி திரைப்படத்தில் எப்படி மறதியோ, துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல் மாதிரி இப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வித்தியாச கதாப்பாத்திரம். அதை இப்பொழுது என்னால் சொல்ல முடியாது" என கூறியுள்ளார்.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
- உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவேன் என்பது திமிர்தனமாக தான் தெரிகிறது.
* ஒரே மொழி என்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.
* இந்தி கற்றே ஆக வேண்டும் என வலிந்து திணிப்பது ஏன்?
* உலகம் முழுவதும் மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
* மற்ற மொழிகளை கற்பது என் விருப்பம். கட்டாயம் பிற மொழிகளை கற்க வேண்டும் என வற்புறுத்துவது ஏன்?
* எங்களின் அடையாளமாக உள்ள எங்கள் தாய் மொழியை அழித்து நாடோடி கூட்டமாக அலையவிடப் போகிறீர்களா? என்று கூறினார்.






