என் மலர்
தலைப்புச்செய்திகள்
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சென்னையில் வெற்றி விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் நஸ்லேன் பேசுகையில்," ஆச்சரியமா இருக்கு. வாழ்க்கைல என்னென்னமோ நடக்குது. எங்கேயோ போயிட்டு இருக்கு. காலையில சூர்யா சார்- ஜோதிகா மேம் வீடியோ கால் பண்ணி படம் சூப்பரா இருந்ததுன்னு சொன்னாங்க" என்றார்.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்தை, பாராட்டுகளை குவித்த 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார்.
ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம் துரைராஜ், நிர்வாக தயாரிப்பு அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு தினேஷ், சண்டை காட்சிகள் மேத்யூ மகேஷ் உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக லெஜெண்ட் சரவணன் இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, லெஜெண்ட் சரவணன் தனது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுகுறித்தும் லெஜெண்ட் சரவணன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்," மாற்று திறமைசாலிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம்" என்று குறிப்பிட்டிருந்தார். மாற்றுத்திறனாளிகளை மாற்றுத்திறமைசாளிகள் என்று குறிப்பிட்ட லெஜெண்ட் சரவணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- ஆப்கானிஸ்தானில் கடந்த 31-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
காபூல்:
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் குனார், நாங்கர்ஹர் ஆகிய மாகாணங்களில் சுமார் 6,782 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,394 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சமமற்ற நிலப்பரப்புகளினால் நிலநடுக்கம் பாதித்த பல கிராமங்களை மீட்புப் படை சென்றடைவது கடினமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 22 அன்று ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்படும்.
- இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்துப் பொருட்களின் விலை குறையும்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:
உரிய காலத்தில் மாற்றங்கள் செய்யாமல் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டை சரியான இடத்தில் நிலைநிறுத்த முடியாது.
ஆகஸ்ட் 15-ல் செங்கோட்டையில் உரையாற்றும்போது இந்தியாவை தன்னிறைவு பெறுவதற்காக, அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தேன். இந்த தீபாவளி மற்றும் சாத் பண்டிகைக்கு மக்களுக்கு இரட்டிப்பு பரிசு கிடைக்கும் என உறுதியளித்து இருந்தேன்.
தற்போது ஜிஎஸ்டி இன்னும் எளிதாக மாறி உள்ளது. நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 அன்று அடுத்த தலைமுறைக்கான இந்த சீர்திருத்தம் அமல்படுத்தப்படும். இந்த சீர்திருத்தம் சாமானிய மக்களுக்கு உதவும். அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும்.
மக்களுக்கு ஆதரவான கொள்கையே எங்களது நோக்கம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்யும். நாட்டின் தேவை குறித்து ஒவ்வொரு மாணவரும் அடுத்த தலைமுறையினரும் சிந்திக்க வேண்டும்.
8 ஆண்டுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, பல ஆண்டு கனவு நனவானது. ஜிஎஸ்டிக்கான விவாதம் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு துவங்கவில்லை. அதற்கு முன்னரே விவாதம் நடந்தது. ஆனால், அதற்கான பணிகளில் யாரும் ஈடுபடவில்லை
ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், நுகர்வு அதிகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனால் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புக்கு ஊக்கம் கிடைக்கும். வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான கூட்டாட்சி ஒத்துழைப்பை இது பலப்படுத்தும். ஏழைகள், நடுத்தர வகுப்பினர், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் அனைவரும் பயன்பெறுவர் என தெரிவித்தார்.
- அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
- தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாம் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நானும் உங்களை போல் விவசாயி என்பதால் சோழவந்தான் விவசாய பகுதி மக்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இலவச மும்முனை மின்சாரம், வேளாண் பொருட்கள் உதவிகள் அதிமுக ஆட்சியில் வழங்கினோம்.
ஏழைகளுக்கு கொடுக்கும் வேட்டி சேலையில் கூட திமுக அரசு ஊழல் செய்கிறது.
அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மீண்டும் ஏழை மாணவர்களுக்கு உறுதியாக லேப்டாப் வழங்குவோம்.
அதிமுக ஆட்சி வந்தவுடன் வீடில்லா விவசாய தொழிலாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
தங்கத்தாலி மட்டுமின்றி மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் மூடப்பட்ட 2000 அம்மா கிளினிக்குகளுக்கு பதிலாக 4000 அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும். ஏழை, எளிய மக்கள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும்.
திமுக ஆட்சியில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழலை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளது.
நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி என தெரிவித்தார்.
- எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கொல்கத்தா:
மகாராஷ்டிரா, அசாம், ஒடிசா, டெல்லி, குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனக்கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேற்கு வங்க சட்டசபையில் இந்த விவகாரம் தொடா்பான சிறப்பு தீா்மானம் ஆளும் கட்சி சார்பில் இன்று முன்மொழியப்பட்டது.
விவாதம் தொடங்கியவுடன் மேற்கு வங்க மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி. மத்தியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாஜக கொறடா சங்கர் கோஷ் இன்று ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சபையில் இருந்து அவர் வெளியேற மறுத்ததால், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.
- வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியீடு.
- கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இது, அவர் தயாரிக்கும் 47வது திரைப்படமாகும்.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதன்படி, படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டது.
- அதிகாலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பீகாரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
- பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை அவதூறு செய்த இந்தியா கூட்டணியைக் கண்டித்து பந்த் நடந்தது.
பாட்னா:
பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறு செய்த இந்தியா கூட்டணியைக் கண்டித்து செப்டம்பர் 4-ம் தேதி அன்று அதிகாலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பீகாரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.
இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ஜெகானாபாத் பகுதியில் பாஜகவினர் பேரணி சென்றனர். அப்போது அங்கு வந்த ஆசிரியை பள்ளி செல்ல தாமதமாகிறது எனக்கூறி பா.ஜ.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்போது பள்ளி செல்வதா எனக்கூறி, பா.ஜ.க. மகளிர் அணியினர் அந்த ஆசிரியை செல்ல விடாமல் தடுத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அங்கிருந்த போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
திரையரங்குகள் தாங்கள் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்களை அதே உற்சாகத்துடன் பார்க்க இந்த ஓடிடி தளங்கள் முக்கிய பங்குவகிக்கிறது. அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கண்ணப்பா
பான் இந்தியா படமாகக் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியானது 'கண்ணப்பா' திரைப்படம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து இருந்தனர். இருவரும் இணைந்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இந்த திரைப்படம், வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
பன் பட்டர் ஜாம்
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் நாளை அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
சரண்டர்
பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் மற்றும் சுஜித் சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சரண்டர்'. கவுதமன் கணபதி இயக்கத்தில் போலீஸ் விசாரணையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது. கடந்த ஆக.1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.
புட்டேஜ்
‛விடுதலை' நாயகி மஞ்சு வாரியர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'புட்டேஜ்'. த்ரில்லர் கதைக்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியானது. சைஜூ ஸ்ரீதரன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சூ ஃப்ரம் சோ
ஜெ.பி தும்மினாட் இயக்கத்தில், உருவான காமெடி திரைப்படம் 'சூ ப்ரம் சோ'. கன்னட திரையரங்கில் சூப்பர் ஹிட் அடித்த இந்த திரைப்படம், ரூ.120கோடி வரை வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. கன்னடம் தவிர்த்து தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் செப்டம்பர் 5 அல்லது 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் ராஜ் பி ஷெட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
- லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
- பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பு.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப்படம் திறப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
அந்த பதிவில், " உலகெங்கிலும் உள்ள மக்களின் தன்மானத்தை சுயமரியாதையையும் காத்தவர் தந்தை பெரியார்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பப்படுகிறது" என்றார்.
- தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம்.
- த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டம்.
வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைப்பு ரீதியாக ஒரு நாளில் 2 மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுப்பயணத்தின்போது த.வெ.க. தலைவர் விஜய் அந்தந்த பகுதி பிரச்சனைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக 5 வாரங்களுக்கு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதல் வாரம்- திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூரில் சுற்றுப்பயணம் எனவும், 2வது வாரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, 3வது வாரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, 4வது வாரம்- திருப்பூர், ஈரோடு, நீலகிரி; 5வது வாரம்- திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்களை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
சிவகார்த்திகேயன் நடிப்பில் "மதராஸி"
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன்-டிராமா கலந்த படைப்பு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் படம் மதராஸி. இப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொண்டுள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் "பேட் கேர்ள்" {Bad Girl}
வெற்றிமாறனின் பேனர் கீழ் உருவாகியிருக்கும் Bad Girl படத்தை வர்ஷா பரத் இயக்க அஞ்சலி சிவராமன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாலா நடித்த "காந்தி கண்ணாடி"
சின்னத்திரையில் தனக்கு என ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கலக்கு கலக்கிய பாலா தற்பொழுது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பாலாவின் புதிய முயற்சியாக உருவான இந்த படம், சமூக பிரச்சனைகள் மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அனுஷ்கா நடிப்பில் "காட்டி"
தனித்துவமான கதையம்சத்துடன் உருவான அனுஷ்காவின் படைப்பு, பெண்கள் மையமாக இருக்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு சினிமா துறையில் அறிமுகமாகினார்.
"தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்"
பிரபல ஹாலிவுட் ஹாரர் பிராண்டின் புதிய பகுதி, ஹாரர் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி அனுபவத்தை வழங்க வருகிறது.
மொத்தம் 5 திரைப்படங்கள் ரசிகர்களை கவர தயாராக காத்திருக்கின்றன. ஆக்ஷன், டிராமா, ஹாரர் என பல்வேறு வகைகளில் வெளியாகும் இந்த படங்கள், பாக்ஸ் ஆபிஸ் விறுவிறுப்பை அதிகரிக்க இருக்கிறது.






