என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்யாணி பிரியதர்‌ஷன்"

    நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இப்படத்தை இந்தி மொழியில் கடந்த 5 ஆம் தேதி வெளியிட்டனர். ஆனால் திரைப்படம் 4 நாட்களின் முடிவில் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இந்தியில் பாகி 4 மற்றும் பரம் சுந்தரி போன்ற திரைப்படங்கள் ஓடிக்கொடிருப்பதால் இப்படத்தை யாரும் பார்க்க பெரிதாக முன்வரவில்லை.

    இத்திரைப்படம் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

    தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் லோகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இத்திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சென்னையில் வெற்றி விழா நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நடிகர் நஸ்லேன் பேசுகையில்," ஆச்சரியமா இருக்கு. வாழ்க்கைல என்னென்னமோ நடக்குது. எங்கேயோ போயிட்டு இருக்கு. காலையில சூர்யா சார்- ஜோதிகா மேம் வீடியோ கால் பண்ணி படம் சூப்பரா இருந்ததுன்னு சொன்னாங்க" என்றார்.

    சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் படைத்த பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன் மிரட்டியிருக்கிறார்.

    கதைக்களம்

    இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். பேக்கரி ஒன்றில் பணியாற்றும் அவர் தங்கியிருக்கும அடிக்குமாடி குடியிருப்புக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசிக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் வாழ்ந்து வருகின்றனர். எதிர் வீட்டில் இருக்கும் இவர்கள் கல்யாணியை காதலில் விழ வைக்க முயற்சி செய்கிறார்கள்.

    அதே சமயம், மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன், கல்யாணி பிரியர்தர்ஷன் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

    அப்போது தான் தெரிய வருகிறது கல்யாணி ஒரு சாதாரண பெணல்ல அவளுக்கு பல சக்திகள் இருக்கிறது. அதற்கு அடுத்து என்ன ஆனது? உண்மையில் கல்யாணி யார் ? எப்படி அவருக்கு இந்த சக்தி கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் படைத்த பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார். அதிகம் பேசவில்லை என்றாலும், தனது அளவான உடல் அசைவுகள் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    சந்திராவை காதலில் விழவைக்கும் போராடும் இளைஞர்களாக நடித்திருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் அவர்களது உரையாடல் மற்றும் உடல் மொழி ஆகியவை பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டியின் வில்லத்தனம் மிரள வைக்கிறது.

    இயக்கம்

    நம் புராணக் கதைகளில் உள்ள கதாபாத்திரத்தை அதீத சக்தி படைத்த சூப்பர் ஹீரோவாக சித்தரித்து, அதன் மூலம் ஒரு மிகப்பெரிய உலகத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் டொமினிக் அருண், சந்திரா என்ற முதல் அத்தியாயத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். குறிப்பாக சந்திராவின் ஃப்ளேஷ்பாக் பகுதியை கையாண்ட விதம் பாராட்டுக்குறியவை.

    முதல் பாதியில் திரைக்கதை விறுவிறுப்பாக சென்றாலும் அது இரண்டாம் பாதியில் சற்று தொய்வடைகிறது. முதல் பாதி பார்வையாளர்களுக்கு சிறு குழப்பம் ஏற்படுத்துவது பலவீனம்.

    பல கேள்விகளுக்கு படத்தில் விடை சொல்லாமல், வேறு சூப்பர் ஹீரோக்களின் அறிமுகத்தோடு படத்தை முடித்திருப்பது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது.

    இசை

    இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை,

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கோணங்கள் மற்றும் வண்ணங்கள் படத்தை பிரமாண்டமானதாக மட்டும் படத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. படத்தில் வரும் இரவு காட்சிகள் மிகவும் கலர்ஃபுல்லாக காட்சி படுத்தியுள்ளார்.

    தயாரிப்பு

    இப்படத்தை துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரேட்டிங்- 3/5

    தமிழ், தெலுங்கு என முன்னணி நாயகியான கீர்த்தி சுரேஷ் 5 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன் லால் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #Marakkar #MohanLal #KeerthySuresh
    கீர்த்தி சுரேஷ் அறிமுகமானதே பிரியதர்‌ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படத்தில் தான்.

    தற்போது முன்னணி நடிகையாகிவிட்ட கீர்த்தி சுரேசுக்கு தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் பெரிய மார்க்கெட் உருவாகி இருக்கிறது. அவருக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க தயாராக உள்ளனர்.

    ஆனால் அவர் யாரும் எதிர்பாராத வகையில் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மோகன்லால் - பிரியதர்‌ஷன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்.


    பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன்

    பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் மோகன் லாலின் இளவயது கதாபாத்திரத்தில் அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியதர்‌ஷனின் மகளான கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். தன்னை அறிமுகப்படுத்திய கூட்டணி என்பதால் நன்றிக்கடனுக்காக 5 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் நடிக்கிறார். #Marakkar #MohanLal #KeerthySuresh

    ×