என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
- வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கிறது. 234 தொகுதிகளிலும் களம் இறங்கும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் முன்னிறுத்தப்பட்டு உள்ளார்.
ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
விஜய் போட்டியிட போகும் தொகுதி பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். விஜய் கட்சி தொடங்கும் போதே வெற்றியை குறிக்கும் வகையில் முதல் எழுத்தான 'வி'யில் தொடங்கும் ஊர்களை தேர்வு செய்து மாநாட்டை நடத்த முடிவு செய்தார்.
அதன்படி விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய 3 தொகுதிகள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள வி.சாலையில் தான் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது.

மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் இந்த கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயனிக்கும் பலர் வி.சாலை வழியாக அங்கு சென்று கொடிக்கம்பத்தை பார்வையிட்டும் விஜய் படத்துடன் இடம் பெற்றுள்ள கல்வெட்டு அருகே நின்று புகைப்படம் எடுத்தும் செல்கிறார்கள்.
த.வெ.க. வரலாற்றில் முதல் முத்திரை பதித்த இந்த தொகுதியையே விஜய் முதல் தேர்வாக வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் போட்டியிட்டால் தனது தொகுதியில் பிரசாரம் செய்வதோடு மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் எளிதாக பிரசாரம் செய்ய சென்று வரலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. 103 ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி, காணை, கோலியனூர், கண்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் அடங்கி உள்ளன.
2011 தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து தற்போதைய விக்கிரவாண்டி தொகுதி செயல்பட்டு வருகிறது.
- காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.
- சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1200 கனஅடியாக வந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1500 கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
- பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.
மேலும், அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும்.
தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு உள்பட நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. 2 கோடிக்கும் அதிகமான பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள் மற்றும் வாகனங்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டு, உயிரி பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் சுகாதாரமான முறையில் கோழிப்பண்ணைகளை அமைத்து நடத்தி வருவதாலும், சென்னையில் இருந்து நாமக்கல்லுக்கோ, நாமக்கல்லில் இருந்து சென்னைக்கோ கோழிப்பண்ணை சம்மந்தமான முட்டை, தீவனம் போன்ற பொருட்கள் போக்குவரத்து நடைபெறுவதில்லை.
இதனால் நாமக்கல் மண்டலத்தில் பறவைக்காய்ச்சல் தொற்று நோய் பரவ வாய்ப்பில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் நின்ற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே நீர்வரத்தாக இருந்து வந்தது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்வரத்து தொடர்ந்து சரிந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் 45 அடியாக குறைந்தது. வைகை அணையில் இருந்து முறைநீர் பாசனம் மூலம் தண்ணீர் 300 கன அடி வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை, திருமங்கலம், சேடப்பட்டி குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 45.80 அடியாக உள்ளது. வரத்து 442 கன அடி. இருப்பு 1489 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது. வரத்து 24 கன அடி. திறப்பு 700 கன அடி. இருப்பு 3004 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.10 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.36 அடியாகவும், சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாகவும் உள்ளது.
- தங்கம் விலை நேற்று காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது.
- தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடையச்செய்கிறது.
நேற்று தங்கம் விலையில் 2 முறை மாற்றம் இருந்தது. தங்கம் விலை காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960-க்கும் விற்பனையானது. மீண்டும் மாலையில் தங்கம் விலை உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,250-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1040 உயர்ந்து ரூ. 1,14,500-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000
05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
04-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160
02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
06-02-2026- ஒரு கிராம் ரூ.280
05-02-2026- ஒரு கிராம் ரூ.300
04-02-2026- ஒரு கிராம் ரூ.320
03-02-2026- ஒரு கிராம் ரூ.300
02-02-2026- ஒரு கிராம் ரூ.300
- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.
சசிகலாவை சந்தித்த நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அமமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக மாணவியர் அணி செயலாளர் பி.ஜீவிதா நாச்சியார் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நகரில் உள்ள 66 பூத்துகளில் கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும்.
- ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 1500 பேர் அந்த கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தலைமையில் இணைந்தனர்.
விழாவில் கே.பி.முனுசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. சுயமரியாதை உள்ள இயக்கம். இந்த இயக்கத்தில் உழைப்பவர்களுக்கு மதிப்பு உண்டு. அதனால் மாற்றுக்கட்சிகளில் இருந்தவர்கள் இன்று அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளீர்கள். இந்த கட்சியில் வாரிசு அரசியல் கிடையாது. நீங்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளதால் கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வின் வாக்கு மேலும் உயரும்.
நகரில் உள்ள 66 பூத்துகளில் கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம், டவுன் பஸ்களில் ஆண்களுக்கும் கட்டணமில்லாத பயணம் திட்டங்களை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்.
ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிருக்கு ஸ்கூட்டி வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் என 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க நடவடிக்கை, இல்லத்தரசிகளுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இவ்வாறு தேர்தல் வாக்குறுதிகளாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
திருவேற்காடு:
திருவேற்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்களின் தாகத்தை தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தின் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தை மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தில் அட்டைப்பூச்சி, பல்லி, பாசிகள் இருப்பதை கண்ட பக்தர் ஒருவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ வைரலாக பரவியது.
சுகாதாரமற்ற நிலையில் உள்ள அந்த தண்ணீரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகள் குடிப்பதால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு அதனை பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
- தகுதியான லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்
- சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த சந்திப்பு கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் திடலில் தி.மு.க. தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் இன்று மாலையில் நடக்க இருக்கிறது.
இதற்காக மாநாடு போன்று பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இதுகுறித்து விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தென் மண்டலத்தில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10 வருவாய் மாவட்டங்கள்.
தி.மு.க. அமைப்பு ரீதியாக 20 மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், கிளை, வார்டு, பூத் அளவிலான அனைத்து நிலை இளைஞரணி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தகுதியான லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அரசாணைகளை முழுமையாக பின்பற்றி உரிய துறைகளிடமிருந்து அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனம் நிறுத்தும் வசதி, உணவு, குடிநீர், கழிவறைகள், ஒலி-ஒளி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் தன்னார்வலர்கள், மருத்துவக்குழுக்கள், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு திடலுக்கு வருகின்றனர்.
ஏற்பாட்டு பணிகளை அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த சந்திப்பு கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
- நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அம்பத்தூர்: TI Cycle 3வது பிரதான சாலை மற்றும் 6 முதல் 9வது தெருக்கள் வரை.
அம்பத்தூர் தொழிற்பேட்டை: மகாத்மா காந்தி சாலை 4வது, 5வது, 6வது, 11வது, 12வது தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ரெயில் நிலைய சாலை 5வது, 6வது, 7வது தெருக்கள்.
- தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது.
- ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?.
மீனம்பாக்கம்:
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை பெறுவது என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்ல வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, "தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதம் இருக்கிறது" என்றார்.
அப்போது நிருபர்கள், "ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்குவாரா?. தி.மு.க. அல்லது த.வெ.க.வில் இணைவாரா?" என கேட்டதற்கு அவர், "எந்த ஓ.பி.எஸ்.?" என கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார்.






