search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறிய டி.டி.வி. தினகரன்
    X

    பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறிய டி.டி.வி. தினகரன்

    • தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • விஜயகாந்திற்கு பொது இடத்தில் அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    சென்னை :

    விஜயகாந்த் மறைவையொட்டி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆறுதல் கூறினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சுதீஷின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.


    இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு என்னால் அன்றைக்கு வரமுடியாத சூழ்நிலை. இன்றைக்கு பிரேமலதா, சுதீஷ் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து விட்டு விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினேன். விஜயகாந்திற்கு பொது இடத்தில் அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதற்கிடையே தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×