search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் போய்விட்டனர்: ஜெயக்குமார்
    X

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் போய்விட்டனர்: ஜெயக்குமார்

    • தி.மு.க. ஆட்சியில் திரைத்துறையில் சர்வாதிகாரம் நடக்கிறது.
    • காவிரி பிரச்சனையில் தமிழக அரசு உரிய முறையில் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் திரைத்துறையில் சர்வாதிகாரம் நடக்கிறது. திரையுலகில் இருப்பவர்கள் அதனை தட்டிக்கேட்க வேண்டும். அமைதியாக இருக்கக் கூடாது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் போய் விட்டனர். காவிரி பிரச்சனையில் தமிழக அரசு உரிய முறையில் செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் விதவிதமான காய்ச்சல் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வேண்டிய அரசு செயல்படாமல் இருக்கிறது.

    இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

    Next Story
    ×