search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா: 15-ந்தேதி தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை தொடங்கி வைக்கிறார்
    X

    அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா: 15-ந்தேதி தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை தொடங்கி வைக்கிறார்

    • திருவிழா அக்டோபர் மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பலத்த போலீஸ் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி 10 நாள் புரட்டாசி திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு பால்ப ணிவிடை, உகப்படியும் காலை 6.30 மணிக்கு திருநாமக்கொடியும் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

    வருகிற 7-ந்தேதி இரவு அன்னவாகனத்தில் அய்யா பதிவலம் நடக்கிறது. 8-ந்தேதி மாலை 6 மணிக்கு செண்டை மேளத்துடன் கருடவாகனத்தில் மணலி புதுநகருக்குள் அய்யா நகர்வலம் வருகிறார்.

    9-ந்தேதி இரவு மயில் வாகனத்திலும், 10-ந்தேதி ஆஞ்சநேயர் வாகனத்திலும், 11-ந்தேதி சர்ப்ப வாகனத்திலும்,12-ந்தேதி மலர்முக சிம்மாசன வாகனத்திலும் அய்யா பதிவலம் வருகிறார். விழாவின் 8-வது நாளான 13-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 9 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. இதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு குதிரை வாகனத்திலும், 14-ந்தேதி காமதேனு வாகனத்திலும் அய்யா பதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார். தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை-தூத்துக் குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி.அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல், இரவு10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 மணிக்கு அய்யா பூம் பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல், வைகுண்ட சோபனம், அண்டநாமம், திருநாமக்கொடி இறக்குதல், பள்ளியுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி. துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமி நாதன், பொருளாளர். பி. ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணைப் பொது செயலாளர் கே. ராம மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள் விழா நாட்களில் பக்தர்கள் சென்று வர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம் நவீன கழிப்பறைகள் உணவு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது பலத்த போலீஸ் மற்றும் தீயணைப்பு பாது காப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×