search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கன மழையால் 5 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு
    X

    தமிழகத்தில் கன மழையால் 5 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு

    • கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை மழை காரணமாக 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் அதிக மழை பதிவாகி உளளது.

    புதுச்சத்திரத்தில் 15.74 செ.மீ., கல்லணையில் 14.22 செ.மீ., கரூரில் 13.26 செ.மீ., திருச்சி விமான நிலையம் 12.94 செ.மீ., சமயபுரத்தில் 12 செ.மீ. பெய்துள்ளது.

    கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆடு-மாடுகள் இறந்துள்ளன. 24 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி முடிய மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    24-ந்தேதி வரை (வெள்ளி) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் 40 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடலோர பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன் எச்சரிக்கை அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கும் பலத்த காற்று, கடல் அலை சீற்றம் குறித்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி செல்போன்களில் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×