search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்மீக புரட்சிக்கு வித்திடும் ஆட்சியாக தி.மு.க. விளங்குகிறது- அமைச்சர் பி.கே.சேகர்பாபு
    X

    ஆன்மீக புரட்சிக்கு வித்திடும் ஆட்சியாக தி.மு.க. விளங்குகிறது- அமைச்சர் பி.கே.சேகர்பாபு

    • தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் இதுவரையில் 918 கோவில்கள் கும்பாபிஷேகம் நடை பெற்று இருக்கின்றது.
    • முதன் முதலில் இங்குதான் செப்பேடுகளில் தேவாரம் பாடல்கள் கிடைத்துள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மயிலாடு துறை மாயூரநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறு வதை முன்னிட்டு, அங்கு நிறைவுபெற்றுள்ள திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழி, சட்டநாதர் கோவிலையும் பார்வையிட்டார்.

    அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

    மயிலாடுதுறை, மயூர நாதர் சுவாமி கோவிலுக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 9 கோடி மதிப்பீட்டிலும், துக்காச்சி, சவுந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஆபத்ச காயேசுவரர் கோவிலுக்கு ரூ,3.66 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு கோவில்களுக்கும் வரும் மூன்றாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றன.

    தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் இதுவரையில் 918 கோவில்கள் கும்பாபிஷேகம் நடை பெற்று இருக்கின்றது.

    மேலும் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கோவில்கள் கும்பாபிஷேகம்கள் நடைபெற்றுள்ளது.

    சட்டநாதர் கோவில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு பள்ளம் தோண்டிய போது பல அரிய செப்பேடுகளும், உலோக திருமேனிகளும், பூஜை பொருட்களும் கிடைத்திருக்கின்றன.

    முதன் முதலில் இங்குதான் செப்பேடுகளில் தேவாரம் பாடல்கள் கிடைத்துள்ளது. இது தமிழகத்தின் வரலாறாகும். இவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. செப்பேடுகளில் மொழி பெயர்க்க வேண்டிய பாடல்கள் அரிய பாடல்கள் இருப்பதால், தொல்லியல் துறையோடு கலந்தாலோசித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதில் முதலமைச்சர் தகுந்த நல்ல முடிவினை எடுப்பார். மேலும் பல செப்பேடுகள் இருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு, அவற்றையும் எடுப்பதற்கு முதலமைச்சரின் ஆலோசனையோடு மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியானது ஆன்மீக புரட்சிக்கு வித்திடுகின்ற ஆட்சியாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிகளில் ஆணையர் முரளீதரன், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, செ,இராமலிங்கம், எம்.பி. மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×