search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காலை உணவு திட்டம் பற்றிய ஓவியம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு
    X

    காலை உணவு திட்டம் பற்றிய ஓவியம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

    • குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்.
    • ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    காலை உணவுத் திட்டம் குறித்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி ஒருவருக்கு உணவு ஊட்டி விடுவது போன்ற காட்சியை தத்ரூபமாக பள்ளியில் உள்ள போர்டில் வரைந்திருந்தனர். பள்ளி மாணவர்கள் வரைந்த அந்த ஓவியத்தை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருப்பதோடு, மாணவர்களையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், "இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும். அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×