search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேட்பாளர்கள் செலவுக்கு கொடுத்த கோடிகளை தேடும் பாஜக விசாரணை குழு
    X

    வேட்பாளர்கள் செலவுக்கு கொடுத்த கோடிகளை தேடும் பாஜக விசாரணை குழு

    • பெரும்பாலும் வேட்பாளர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பணங்களை அவர்கள் பொறுப்பாளர்களிடம் கொடுத்து பூத் வரை செலவு செய்ய வேண்டும் என்பது விதி.
    • ஒவ்வொரு தொகுதியிலும் மையக்குழு கூட்டத்தை கூட்டி வரவு, செலவு கணக்குகளை கேட்டு அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஓட்டுப்பதிவு முடிந்து ஒட்டுகள் பாதுகாப்பாக உள்ளன. இதற்கிடையில் நோட்டுக்களை எண்ண வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது.

    தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிட்ட தொகுதிகள் ஏ,பி,சி என்று 3 பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தன.

    இதில் 'ஏ' பிரிவில் தென் சென்னை, மத்திய சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை ஆகிய தொகுதிகள் இடம்பெற்று இருந்தன.

    வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்ட இந்த தொகுதிக்கு தாராளமாக செலவுக்கு கட்சி சார்பில் பணம் கொடுக்கப்பட்டது.

    பெரும்பாலும் வேட்பாளர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பணங்களை அவர்கள் பொறுப்பாளர்களிடம் கொடுத்து பூத் வரை செலவு செய்ய வேண்டும் என்பது விதி.

    ஆனால் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் கொடுத்த பணம் கீழ்மட்டம் வரை செல்லவில்லை. சில தொகுதிகளில் வேட்பாளர்களே கொடுத்த பணம் முழுவதையும் செலவு செய்யவில்லை. சில தொகுதிகளில் பொறுப்பாளர்கள் மொத்தமாக சுட்டுவிட்டார்கள் என்று ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெருமளவில் பணத்தை சுருட்டிய சில முக்கிய நிர்வாகிகள் மீது டெல்லி மேலிடத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதையடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் மையக்குழு கூட்டத்தை கூட்டி வரவு, செலவு கணக்குகளை கேட்டு அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    தென் சென்னையில் மையக் குழு கூட்டம் நடத்தி கணக்கு கேட்கப்பட்டுள்ளது. மத்திய சென்னை, திருவள்ளூர் தொகுதிகளில் இன்னும் கூட்டம் கூட்டவில்லை. காணாமல் போன கோடிகளை தேடும் படலம் பா.ஜ.க. வுக்குள் பரபரப்பாக பேசப்படுகிறது.

    Next Story
    ×