என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
Byமாலை மலர்25 March 2022 4:28 AM GMT (Updated: 25 March 2022 4:28 AM GMT)
கூடங்குளம் முதல் அணு உலையில் இருந்து மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு 565 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு 3, 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 5, 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது.
முதல் 2 அணு உலைகளில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் இருந்து தமிழகத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு பராமரிப்பு பணிக்காக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் அணு உலையில் இருந்து மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு 565 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
2-வது அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொருட்களும் மாற்றப்படுகிறது. இதற்கு சுமார் 55 நாட்கள் ஆகும் என்று அணுமின் நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே அதன்பிறகே 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு 3, 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 5, 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது.
முதல் 2 அணு உலைகளில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் இருந்து தமிழகத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு பராமரிப்பு பணிக்காக 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் அணு உலையில் இருந்து மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு 565 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
2-வது அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொருட்களும் மாற்றப்படுகிறது. இதற்கு சுமார் 55 நாட்கள் ஆகும் என்று அணுமின் நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே அதன்பிறகே 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X