என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடரும் மழை- மின்னல் தாக்கி 19 ஆடுகள் பலி
Byமாலை மலர்27 Oct 2021 7:26 AM GMT (Updated: 27 Oct 2021 7:26 AM GMT)
கூடங்குளம் அருகே திருவம்பலாபுரத்தில் பலவேசம் என்பவருக்கு சொந்தமான 19 ஆடுகள் மின்னல் தாக்கி பலியானது.
நெல்லை:
வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது.
பின்னர் மழை நின்ற நிலையில் இரவு 10 முதல் நள்ளிரவு வரை மீண்டும் மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கியது.
கூடங்குளம் அருகே திருவம்பலாபுரத்தில் பலவேசம் என்பவருக்கு சொந்தமான 19 ஆடுகள் மின்னல் தாக்கி பலியானது.
தொடர் மழையால் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதிகளிலும், ஊருடையான் குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் தரைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது.
அதிகபட்சமாக தூத்துக்குடியில் 44 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 43 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 135.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1104.17 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1404.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.97 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம் 79.10 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக கடனாநதி அணை இன்று 2 அடி உயர்ந்து 82 அடியாகவும், கருப்பாநதி 68.57 அடியாகவும், ராமநதி 72.25 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 127.25 அடியாகவும் உள்ளது.
குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது.
பின்னர் மழை நின்ற நிலையில் இரவு 10 முதல் நள்ளிரவு வரை மீண்டும் மழை பெய்தது. இதனால் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கியது.
கூடங்குளம் அருகே திருவம்பலாபுரத்தில் பலவேசம் என்பவருக்கு சொந்தமான 19 ஆடுகள் மின்னல் தாக்கி பலியானது.
தொடர் மழையால் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதிகளிலும், ஊருடையான் குடியிருப்பு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் தரைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது.
அதிகபட்சமாக தூத்துக்குடியில் 44 மில்லி மீட்டரும், காயல்பட்டினத்தில் 43 மில்லி மீட்டரும் மழை பதிவானது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 135.75 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1104.17 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1404.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.97 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம் 79.10 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக கடனாநதி அணை இன்று 2 அடி உயர்ந்து 82 அடியாகவும், கருப்பாநதி 68.57 அடியாகவும், ராமநதி 72.25 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 127.25 அடியாகவும் உள்ளது.
குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி உள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X