search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.
    X
    புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.

    புதிதாக கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார் விஜய் வசந்த்

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு பள்ளியில் மறைந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நிதியில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
    இரணியல்:

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு பள்ளியில் மறைந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நிதியில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    பின்னர் மறைந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி புதிய கல்வெட்டையும்  திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் வட்டாரத் தலைவர்ஜெரால்ட் கென்னடி, டாக்டர் பினுலால், லாரன்ஸ், ஜேக்கப், சுதன், நவீன்தலைமை ஆசிரியர் ராஜேஷ்வரி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×