என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
Byமாலை மலர்20 Feb 2021 4:21 AM GMT
ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கள்சந்தை
இரணியல் அருகே குருந்தன்கோட்டை சேர்ந்த தங்கரத்தினம்(வயது 50), தொழிலாளி. இவருடைய தாயார் ஒருவரிடம் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதனை திருப்பி கொடுக்கவில்லை. இதற்கிடையே அவருடைய தாயார் இறந்து விட்டார்.
இதற்கிடையே கடன் கொடுத்தவர் இரணியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், தங்கரத்தினத்தின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி கோர்ட்டு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று தங்கரத்தினத்தின் வீட்டில் இருந்து பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கரத்தினம் குடும்பத்துடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைக்கண்டு அதி்ர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரணியல் அருகே குருந்தன்கோட்டை சேர்ந்த தங்கரத்தினம்(வயது 50), தொழிலாளி. இவருடைய தாயார் ஒருவரிடம் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதனை திருப்பி கொடுக்கவில்லை. இதற்கிடையே அவருடைய தாயார் இறந்து விட்டார்.
இதற்கிடையே கடன் கொடுத்தவர் இரணியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், தங்கரத்தினத்தின் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி கோர்ட்டு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று தங்கரத்தினத்தின் வீட்டில் இருந்து பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கரத்தினம் குடும்பத்துடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைக்கண்டு அதி்ர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X