search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளிக்க முயற்சி"

    • சின்னம்மாள் என்பவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
    • எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி கான்வெண்ட் வீதியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கையில் மண்எண்ணெய் கேன் கொண்டு வந்த அவர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சின்னம்மாள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் நஞ்சப்பனுக்கு 2 மனைவிகள். எனக்கு குழந்தை இல்லை. எனது கணவர் இறந்து விட்டார். எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது. அதனை முதல் மனைவி அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். எனவே வீடு, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
    • கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் ஊத்துமலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சுப்பையா. இவரது மகன் தமிழ்வாணன் (வயது 35).

    இவருக்கு மகேஸ்வரி (31) என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. தமிழ்வாணன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்தபோது லாரியில் இருந்து கெமிக்கலை இறக்கி கொண்டிருந்தபோது அவரது உடலில் கெமிக்கல் பட்டு காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரால் மேற்கொண்டு லாரி ஓட்டும் தொழிலை செய்ய முடியவில்லை. இதனால் தமிழ்வாணன் விபத்து இழப்பீடு கேட்டு தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கு முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனாலும் அதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் வழக்கை விரைந்து விசாரித்து இழப்பீடு வழங்குமாறு தமிழ்வாணன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

    இந்நிலையில் இன்று வழக்கு தொடர்பான விசாரணைக்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் தமிழ்வாணன் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவர் வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் வழியாக கோர்ட்டுக்குள் வந்துள்ளார்.

    பின்னர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்து வந்த அவர் தனது 2 குழந்தைகளையும் ஓரமாக உட்கார வைத்து விட்டு கோர்ட்டு வளாகத்தில் மனைவியுடன் பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் பார்த்து ஓடி வந்து 2 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அப்போது அவர், நான் வேலைக்கு செல்ல முடியாததால் ரூ.6 லட்சம் வரை கடனாளியாக உள்ளேன். வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    பின்னர் அவர்களை குழந்தைகளுடன் அழைத்துச் சென்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சித்தார்.
    • நிலப்பிரச்சனையால் சம்பவம்

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஜ்ஜனள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வசித்து வருகிறார். ராஜகோபால் விவசாய நிலத்திற்கு அருகில் அரசு ஓடை புறம்போக்கு இருந்து வந்துள்ளது.

    இந்த ஓடை புறம்போக்கு வழியாக தனது விவசாய நிலத்திற்கு காலகாலமாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், குமார், சுரேஷ், பொன்முடி, மகேந்திரன் ஆகியோர் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதில் ராஜ கோபால் வயலுக்கு செல்ல வழி விடாமல் மிரட்டி வரு வதாக கூறப்படுகிறது.

    மேலும் விவசாய நிலத்தி ற்கு வழி விடாமலும், வயதான நிலையில் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் வழியில்லாமல் ராஜ கோபால் குடும்பத்தகனர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, ராஜகோபால் தனது குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்தி ருந்தார்.

    அப்பொழுது திடீ ரென மறைத்து வைத்திருந்த 5 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து, உடலின் மீது ஊற்றி தற்கொலை செய்வதற்கு முயற்சித்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.
    • போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமத்தை சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள் (வயது 75), அவரது மகன் சரபோஜி (40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி (38) ஆகிய 3 பேரும் நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தங்களது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    இதனை பார்த்த போலீசார் உடனடியாக ஓடி சென்று அவர்களிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    நாங்கள் எங்கள் ஊரில் 2.50 ஏக்கரில் நெற்பயிர் செய்துள்ளோம். விவசாயத்தை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் எனது இறந்த மகனின் மனைவி அதாவது எனது மருமகள் விளைநிலத்தில் எனக்கும் பங்கு உண்டு எனக்கூறி 30 பேருடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தினார்.

    மேலும் நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.

    இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். நாங்கள் உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட மருமகள் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தில் நெற்பயிர் அறுவடை செய்ய எந்த இடையூறும் ஏற்படாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
    • நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பல்பாக்கி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்து தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.

    இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற முதியவர் நாராயணன் கூறியதாவது:-

    எனக்கு முனியப்பன் மற்றும் அமிர் தலிங்கம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முனியப்பன் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் எனக்கு சொந்தமான 1.38 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டார். இது குறித்து எனது மகனிடம் கேட்டபோது என்னை திட்டி வெளியேற்றுகிறார். வயதான நான் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வந்தேன். இதனால் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வதை விட அனாதையாக இருக்கும் எனக்கு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்து விடலாம் என நினைத்து தீக்குளிக்க முயற்சி செய்தேன். மாவட்ட நிர்வாகம் என் மகன் மீது நடவடிக்கை எடுத்து வாழ வழிவகை செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து முதியவரை டவுன் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளி மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்தோம். கடந்த 4 ஆண்டு காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. மாற்றுத்திறனாளி. இவரது மனைவி வீரம்மாள்.

    இவர்கள் இருவரும் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் முனுசாமி கூறியதாவது:-

    எங்களுக்கு சொந்தமான 75 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு பட்டா கேட்டு மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்தோம். கடந்த 4 ஆண்டு காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இது குறித்து கேட்டதற்கு எங்கள் நிலத்திற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் எங்கள் நிலத்தின் வழியாக வரவேண்டும் என்பதால் அவர் பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது தெரியவந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் முனுசாமி மற்றும் வீரம்மாள் ஆகியோரை சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளி மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
    • போலீசார் தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்

    வேலூர்:

    குடியாத்தம்- காட்பாடி சாலையில் உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 45) இவரது மகன்கள் பரத் (23) மணிகண்டன் (20).

    செல்வி இன்று தனது மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார்.

    கூட்டம் நடைபெரும் காயிதே மில்லத் அரங்கம் வெளியே திடீரென பரத் செல்வி ஆகியோர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது பெண் போலீசார் ஒருவர் தவறி கீழே விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக செல்வியின் இடது காதுடன் கம்மல் அறுந்து கீழே விழுந்தது. தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    நாங்கள் வசித்து வந்த வீட்டின் அருகே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் எங்கள் இடத்தில் சுவரை எழுப்பினர். இதனால் நாங்கள் அவதிப்பட்டோம்.

    அருகே இருந்த கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்தோம். கோவில் சார்பில் அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்.

    இதனால் எங்களுக்கு பாதையில்லாத நிலை உள்ளது. நாங்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுவரை இடித்து அகற்ற வேண்டும். எங்களுக்கு பாதை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • விசாரணைக்கு பெண் தேவாரம் போலீஸ் நிலையம் வந்த போது திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றார்.
    • இதுகுறித்து பெண் மீது தேவாரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவா ரம் அருகில் உள்ள டி.ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் வேங்கையன். இவரது மனைவி கவுசல்யா(53). இவர் தனது வீட்டை தம்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த செட்டிவீரன் மகன் பெருமாளுக்கு ஒத்திக்கு விட்டிருந்தார்.

    அவர்களுக்குள் பிரச்சி னை ஏற்பட்டதால் இதுகுறித்து தேவாரம் போலீசில் கவுசல்யா புகார் அளித்தார். விசாரணைக்கு கவுசல்யா தேவாரம் போலீஸ் நிலையம் வந்த போது திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொள்ளப்போ வதாக கூறினார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் கவுசல்யா விடமிருந்து மண்எண்ணையை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கவுசல்யா மீது தேவாரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கவுசல்யா புகாரின்பேரில் பெருமாள், அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து ள்ளனர்.

    இதனிடையே கவுசல்யாவின் கணவர் வேங்கையன், பெருமாளின் உறவினரான ரீட்டா என்பவரை தகாத வார்த்தைகளால் பேசியதால் அவர் தற்கொலைக்கு முயன்றாராம். இதுகுறித்தும் ரீட்டா அளித்த புகாரின்பேரில் தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவருக்கும் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.நட்பாக பழகிய இவர்கள், நாளடைவில் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது அந்த வாலிபர், வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.இதை நம்பிய வினோத்குமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். மேலும் தனது பெயரையும், காதலன் விருப்பத்திற்கு ஏற்ப வினோதினி என மாற்றிக் கொண்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பாலூரில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த வாலிபர், வினோதினியுடன் குடும்பம் நடத்த மறுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.மேலும் வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த வினோதினி, அந்த வாலிபரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, பாலூர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் இருதரப்பினரையும் கடந்த மாதம் 3-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன் பேரில் வினோதினி, ஊர் பஞ்சாயத்துக்கு புறப்பட்ட போது அந்த வாலிபரின் உறவினர்கள் அவரை தடுத்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றார். இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் வினோதினியின் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.இதனால் பாதிக்கப்பட்ட வினோதினி, கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது பற்றி அறிந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
    • பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உதவி கலெக்டர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    கே.வி.குப்பம் அடுத்த மகமது புரத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், முரளி, உத்திரகுமார்.

    இவர்களது 3 குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் திடீரென தயாராக கொண்டு வந்த மண் எண்ணெய் உடல்களில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதில் குழந்தைகளுக்கு உடல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    கிராம குளத்திற்கும் எங்களது நிலத்திற்கு செல்ல பொது வழி உள்ளது. பொது வழியை முருகம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து மண்ணை கொட்டி உள்ளார். விவசாய நிலத்திற்கு செல்லும் போது ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தாக்க முயற்சி செய்கிறார்.

    இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

    • சிவகுமார் (47), மாற்றுத்திறனாளி. இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
    • அப்போது அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினார். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மணியனூர் திருவேங்கட நகரை சேர்ந்தவர் சிவகுமார் (47), மாற்றுத்திறனாளி. இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினார். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த 26-ந் தேதி எனது வீட்டிற்குள் புகுந்து 3 பேர் என்னை தாக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
    • பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி


    திருச்சி,


    திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் மனுநாள் முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்து வந்தனர். மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில், மனுவாங்கும் அரங்கத்தின் நுழைவாயில், பின்புற வாசல் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டர் அலுலக வளாகத்தில் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


    இந்நிலையில் திருச்சி எட்டறை பகுதியை சேர்ந்த கஜப்பிரியா திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென தான் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை உடலின் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், இதனை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை முறியடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது கணவர் கார்த்திக் திருக்காட்டுபள்ளி காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருவதாகவும், தற்போது தன்னுடன் வாழ மறுப்பதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எந்த வித நடவடிக்இகையும் எடுக்கப்படவில்லை என்றும் ெதரிவித்தார்.


    இதே போல தாயனூர் பகுதியை சேர்ந்த பனையடி என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணைய் கேனுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதிப்பதை கண்டு திடுக்கிட்டுள்ளார். இதனால் கலெக்டர் அலுவலக நுழைவாசலிலேயே மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை கண்டு பாய்ந்து சென்று, அவரை மடக்கி பிடித்து, தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனக்கு சொந்தமான இடத்தின் பாதையை சிலர் ஆக்கிரமித்து கொண்டதாகவும், மீட்டு தர கோரி பலமுறை மனு அளித்தும் பலனில்லை என்பதாலும், தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


    திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எத்தனை பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும், இவ்வாறு தற்கொலை முயற்சிகள் வழக்கமாகி வருவது, போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.


    ×