search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பிற்கு ராமதாஸ் வரவேற்பு

    சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கு காலத்தின்போதும், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போதும் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்ற முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பு, சரியான நடவடிக்கை.

    சிஏஏ-வுக்கு எதிரான போராட்டமும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டமும் உள்நோக்கங்கள் கொண்ட போராட்டங்கள் அல்ல என்று அவர் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் பாமக வலியுறுத்தி வந்தது. தற்போது அந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×