என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால்கூலித்தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்23 Jan 2021 11:08 AM GMT (Updated: 23 Jan 2021 11:08 AM GMT)
மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் கங்கவரம் மண்டலம் தன்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிரி பாபு (வயது 44), கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி காந்தம்மாவுடன் தகராறில் ஈடுபடுவார். அதேபோல் 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மதுபானத்தை குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். மகளிர் சுய உதவி குழு மூலம் பெற்ற ரூ.60 ஆயிரத்தில் மது குடிக்க பணம் தர வேண்டும், எனக் கேட்டு கிரிபாபு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். ஆனால் காந்தம்மா கணவருக்கு பணம் கொடுக்க மறுத்ததுடன், கோபித்துக் கொண்டு கங்கவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு நேற்று சென்று விட்டார்.
மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் மனமுடைந்த கிரிபாபு குடிபோதையில் விட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X