என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதலில் கட்டிட தொழிலாளி பலி
Byமாலை மலர்11 Jan 2021 5:35 AM GMT (Updated: 11 Jan 2021 5:35 AM GMT)
மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதலில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் கலகடா மண்டலம் எர்ரய்யகாரிபள்ளியில் உள்ள இந்திரம்மா காலனியைச் சேர்ந்தவர் கங்காதர் (வயது 23), கட்டிடத்தொழிலாளி. அதே காலனியைச் சேர்ந்தவர் ஹாசன்பாஷா. இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் எர்ரய்யகாரிப்பள்ளியில் இருந்து வெளியே புறப்பட்டனர். கிராமம் அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே சலபதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அதில் கங்காதர் படுகாயம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு பீளேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக திருப்பதி ருயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கங்காதர் உயிரிழந்தார். கலகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X