என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
55 அடியை எட்டிய மஞ்சளாறு அணை- இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
Byமாலை மலர்20 Nov 2020 4:39 AM GMT (Updated: 20 Nov 2020 4:39 AM GMT)
தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. இதையடுத்து இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். இந்த அணையின் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கமாகும். ஆனால் இந்த வருடம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணைதிறப்பு தாமதமாகி வந்தது.
இந்நிலையில் இந்த மாதம் தொடக்கம் முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 6-ந்தேதி அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 16-ந்தேதி 53 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.
இதனிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரைதான் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சிவஞானபுரம், குன்னுவாரங்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 126 கன அடியாக உள்ளது. இந்த உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 26-ந்தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். இந்த அணையின் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கமாகும். ஆனால் இந்த வருடம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணைதிறப்பு தாமதமாகி வந்தது.
இந்நிலையில் இந்த மாதம் தொடக்கம் முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 6-ந்தேதி அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 16-ந்தேதி 53 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.
இதனிடையே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலையில் அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரைதான் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, சிவஞானபுரம், குன்னுவாரங்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 126 கன அடியாக உள்ளது. இந்த உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 26-ந்தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X