என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2021-ம் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதம் அறிவிப்பு: எல்.கே.சுதீஷ்
Byமாலை மலர்16 Sep 2020 5:55 AM GMT (Updated: 16 Sep 2020 5:55 AM GMT)
2021-ம் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.
தூத்துக்குடி:
தே.மு.தி.க. மாநில துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை தே.மு.தி.க. ஆதரித்தது. ஏனென்றால் நீட் தேர்வு மூலமாக மருத்துவ மாணவ- மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்கும். அதனால் நீட் தேர்வை ஆதரித்து வந்தோம்.
ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு கொண்டு வந்தால் சரியாக இருக்கும். தற்போது நீட் தேர்வு நடத்துவதை தே.மு.தி.க. எதிர்க்கிறது.
தேசிய கல்விக்கொள்கை கொண்டு வருவது நல்லது தான். தே.மு.தி.க.வின் கொள்கையே அன்னை மொழியைக் காப்போம், அண்மை மொழி கற்போம் என்பது தான். தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் தமிழர்களுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதன் மூலம் அதை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும். அதன் பிறகு பார்க்கலாம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன? என்பதை டிசம்பர் மாதத்துக்குள் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து ஜனவரி மாத இறுதிக்குள் கட்சி தலைமை அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க. மாநில துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை தே.மு.தி.க. ஆதரித்தது. ஏனென்றால் நீட் தேர்வு மூலமாக மருத்துவ மாணவ- மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்கும். அதனால் நீட் தேர்வை ஆதரித்து வந்தோம்.
ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு கொண்டு வந்தால் சரியாக இருக்கும். தற்போது நீட் தேர்வு நடத்துவதை தே.மு.தி.க. எதிர்க்கிறது.
தேசிய கல்விக்கொள்கை கொண்டு வருவது நல்லது தான். தே.மு.தி.க.வின் கொள்கையே அன்னை மொழியைக் காப்போம், அண்மை மொழி கற்போம் என்பது தான். தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் தமிழர்களுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்துவதன் மூலம் அதை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும். அதன் பிறகு பார்க்கலாம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன? என்பதை டிசம்பர் மாதத்துக்குள் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து ஜனவரி மாத இறுதிக்குள் கட்சி தலைமை அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X