என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
Byமாலை மலர்15 Sep 2020 4:31 AM GMT (Updated: 15 Sep 2020 4:31 AM GMT)
வத்தலக்குண்டு அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு முன்னாள் ராணுவவீரர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில், புனித சவேரியார் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. நேற்று இரவு 8¼ மணிக்கு இந்த ஆலயத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டு இருந்தது.
அப்போது, ஆலய சுவரில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சத்தம் கேட்டு பிரார்த்தனையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது சுவரில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான அடையாளமாக கருப்பு நிறத்தில் புகை படர்ந்திருந்தது. மேலும் அங்கு பாட்டில், அதன் மூடி, திரி ஆகியவை கிடந்தன.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கிறிஸ்தவ ஆலயத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.
இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆலயம் முன்பு குவிந்தனர். அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு முன்னாள் ராணுவவீரர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில், புனித சவேரியார் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. நேற்று இரவு 8¼ மணிக்கு இந்த ஆலயத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டு இருந்தது.
அப்போது, ஆலய சுவரில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சத்தம் கேட்டு பிரார்த்தனையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது சுவரில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான அடையாளமாக கருப்பு நிறத்தில் புகை படர்ந்திருந்தது. மேலும் அங்கு பாட்டில், அதன் மூடி, திரி ஆகியவை கிடந்தன.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கிறிஸ்தவ ஆலயத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.
இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆலயம் முன்பு குவிந்தனர். அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X