search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    மதுரையில் இன்று 86 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மதுரை மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,204 ஆக உள்ளது.
    மதுரை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 15,118 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,204 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 13,757 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 369 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×