என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
கோவை:
கோவை குனியமுத்தூர் சுண்ணாம்பு காலாவாய் பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 42). பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அக்பர் அலிக்கு தனது கம்பெனியில் வேலை செய்யும் குறிஞ்சி நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அவர் தனது முதல் திருமணத்தை மறைத்து அந்தப் பெண்ணை காதலிப்பதாக கூறினார். இதையடுத்து இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அக்பர் அலி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் அந்த இளம்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சம்பவத்தன்று கம்பெனியில் அக்பர் அலி செல்போனில் வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தார்.
சந்தேகம் அடைந்த அந்த இளம்பெண் இது குறித்து அவரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் முதல் திருமணம் செய்து கொண்டதை கூறி அந்த இளம்பெண்ணை தாக்கினார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் சாணி பவுடரை குடித்து மயங்கி விழுந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து அந்த இளம்பெண் குனியமுத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அக்பர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்