என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெண்ணந்தூர் அருகே மாணவியிடம் சில்மிஷம்- தொழிலாளி போக்சோவில் கைது
Byமாலை மலர்14 Aug 2020 1:11 PM GMT (Updated: 14 Aug 2020 1:11 PM GMT)
வெண்ணந்தூர் அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அடுத்த அத்தனூரில் அம்மன் கோவில் எம்.ஜி.ஆர். காலனி உள்ளது. இங்குள்ள பொதுகுடிநீர் குழாயில் அரிகரன் மனைவி மோகனா என்பவர் தண்ணீர் பிடித்து சென்றார். 8-ம் வகுப்பு படிக்கும் அவருடைய மகள் தண்ணீரை குடத்தில் பிடித்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சுப்ரமணி (50) என்பவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன், தகராறு செய்து கையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதை பார்த்து திடுக்கிட்ட மோகனா சுப்ரமணியிடம் தட்டி கேட்டபோது அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மோகனா வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்தார். பின்னர் அவர் நாமக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X