search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி போக்சோவில் கைது"

    • தொழிலாளி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானார்.
    • வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு சுரைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 57). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானார்.

    தனது மகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்தனர். அவரிடம் விசாரித்ததில் ராமர் தன்னை பலாத்காரம் செய்ததை தெரிவித்தார். இதனையடுத்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • அன்னூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்
    • 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 சிறுமி. இவர் அன்னூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிறுமி திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அப்போது தர்மபுரி மாவட்டம் டி.ஆண்டியூரை சேர்ந்த பனியன் தொழிலாளி விக்ரம் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். ஆனால் சிறுமி தொடர்ந்து வாலிபருடன் பழகி வந்தார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறிவிட்டனர்.

    பின்னர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமி அன்னூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 25-ந் தேதி சிறுமி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் சேலத்துக்கு சென்றார்.

    அவர் இது குறித்து தனது காதலன் விக்ரமுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக சேலத்துக்கு விரைந்து சென்று சிறுமியை தர்மபுரிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு பெருமாள் கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார். பின்னர் விக்ரம் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மாயமான தங்களது மகை ள கண்டுபிடித்து தரும்படி சிறுமியின் ெபற்ேறார் ேமட்டுப்பாைளயம் ேபாலீசில் புகார் ெசய்தனர்.

    புகாரின் ேபரில் ேபாலீசார் வழக்குப்பதிவு ெசய்து சிறுமியின் ெசல்ேபாைன ைவத்து அவர் இருக்கும் இடத்ைத கண்டுபிடித்தனர்.

    பின்னர் ேபாலீசார் தர்மபுரிக்கு ெசன்று விக்ரமுடன் தங்கி இருந்த சிறுமிைய மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமிைய விக்ரம் பாலியல் பலாத்காரம் ெசய்தது ெதரிய வந்தது.

    இதைனயடுத்து ேபாலீசார் சிறுமிைய திருமணம் ெசய்து பாலியல் பலாத்காரம் ெசய்த விக்ரம் மீது ேபாக்ேசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ெசய்தனர். பின்னர் அவைர ேகார்ட்டில் ஆஜர்படுத்தி ெ ஜயிலில் அைடத்தனர்.

    ×