search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Labour Arrested"

    • தொழிலாளி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானார்.
    • வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு சுரைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 57). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமானார்.

    தனது மகளின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்தனர். அவரிடம் விசாரித்ததில் ராமர் தன்னை பலாத்காரம் செய்ததை தெரிவித்தார். இதனையடுத்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ராமர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
    • மனைவியை வெட்டி கொன்ற கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, கொசவபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். பனை மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 50). இவர்களுக்கு சந்தானகிருஷ்ணன் என்ற மகனும், வீரமணி என்ற மகளும் உள்ளனர்.

    ஆறுமுகம் மற்றும் விஜயலட்சுமி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மது போதையில் வீட்டுக்கு வந்த ஆறுமுகத்தை விஜயலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் பனைமரத்து பாலை வெட்டும் அரிவாளால் விஜயலட்சுமி யின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×