search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

    அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் நாடு முழுவதும் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும் மாணவர் சேர்க்கை போன்ற வினா பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×