search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சாத்தான்குளம் வழக்கு- மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று

    சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.எஸ்.ஐ பால்துரையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


    Next Story
    ×