search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மேட்டூர் அருகே 15 வயதில் குழந்தை பெற்ற சிறுமி- செங்கல் சூளை உரிமையாளர் கைது

    மேட்டூர் அருகே வேலை பார்த்த இடத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதில் அவர் குழந்தை பெற்றார். இதற்கு காரணமான செங்கல் சூளை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் கருமலைக்கூடல் துறையூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 37). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும், அவரது தாயாரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுமி திடீரென கர்ப்பமானார்.

    இது குறித்து சிறுமியிடம் தாயார் கேட்ட போது இதற்கு காரணம் மூர்த்தி என கூறினார். இது பற்றி மூர்த்தியிடம் சிறுமியின் தாயார் கேட்டபோது வி‌ஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இந்த நிலையில் அந்த சிறுமிக்கு மேட்டூர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மூர்த்தி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×