என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுமி கர்ப்பம்"
- பொள்ளாச்சி ஆஸ்பத்திரியில் உண்மை தெரிய வந்தது
- போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து முடிந்து உள்ளார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுமிக்கு அவரது உறவினர் மகனாக 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரும் பழனிக்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 2 பேரும் திருமணம் செய்தனர். இதனையடுத்து 2 பேரும் செட்டிக்காபாளையத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். சிறுமிக்கு ரத்த பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
அப்போது டாக்டர்கள் சிறுமியின் வயதை பார்த்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.
பின்னர் டாக்டர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 17 வயதில் திருமணம் செய்து கர்ப்பமானது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
விருதுநகர்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள மெய்யனூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது75). இவரது 17 வயது பேத்தி திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
பெரியசாமி அவரிடம் விசாரித்தபோது காரியா பட்டியில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக உறவினர் வீட்டுக்கு சென்ற போது கீழஉப்பிலிக்குண்டு பகுதியை சேர்ந்த பால் பாண்டி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து பால்பாண்டியிடம் சிறு மியை திருமணம் செய்து கொள்ளுமாறு உறவி னர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்தார். இதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். போலீசார் பால்பாண்டி மீது போக்சோ வில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மற்றொரு சம்பவம்
விருதுநகரில் கிழக்கு பகுதியில் உள்ள குடி யிருப்பை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெற்றோர் கள் சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருடன் ஒரு வருடமாக பழக்கம் இருப்பதாகவும், அவர் அங்குள்ள தியேட்டர் பகுதிக்கு அழைத்து சென்றும் பெற்றோர் வெளியே செல்கிறபோது வீட்டிற்கு வந்தும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மாணவியின் எதிர்காலம் கருதி ரகசியமாக கருவை கலைக்க முடிவு செய்தனர்.
இதற்காக கருக்கலைப்பு மாத்திரையை மருந்து கடையில் இருந்து வாங்கி வந்து சிறுமிக்கு கொடுத்தனர். இந்த மாத்திரையை சாப்பிட்ட சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்தப்போக்கு அதிகமாகி சிறுமி இறந்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கிடையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கோவில் வழியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர் ராமேசுவரம் சென்று தனது உறவினர் வீட்டில் பதுங்கிக்கொண்டார். உடனே போலீசார் அங்கு சென்று அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருகின்றனர்.
- சிறுமியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் சிக்கனூரில் உள்ள அருந்ததியர் தெருவைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக சிறுமி உள்பட 3 குழந்தைகளையும் பாட்டி வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி சொந்த ஊருக்கு கணவன், மனைவியும் வந்தனர். அப்போது தாயிடம் சிறுமி தனக்கு 4 மாதங்களாக வயிற்றில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார்.
உடனே அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தார்.
இதில் அதே ஊரைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. லெனின்குமார் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அஜித்குமார் சென்னையில் செயல்படும் ஒரு பேக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 4-ந் தேதி சொந்த கிராமத்திற்கு வந்தார்.
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 சிறுமி பிளஸ்-1 வரை படித்துள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கி முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் தொத்தார் கோட்டையை சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் மகன் அஜித்குமார் (வயது25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அஜித்குமார் சென்னையில் செயல்படும் ஒரு பேக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரும், சிறுமியும் 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்குமார் அடிக்கடி சிறுமியை சந்தித்து வந்தார். அப்போது சென்னை திருவான்மியூரில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்று சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 4-ந் தேதி சொந்த கிராமத்திற்கு வந்தார்.
பின்னர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் காளையார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருவாடானை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார். அதே பகுதியான விலங்கல்பட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24). அவரது சகோதரி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்ததுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் நேற்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சியடைந்து, 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவரது தாயாரிடம் தெரிவித்தார். இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்த போது ராஜ்குமார் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். மேலும், ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
- தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி திருவந்திபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்துவந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 14 வயது சிறுமி படிக்கும் பள்ளியில் படித்து வந்தார். அப்போது இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தனர். இந்த விவகாரம் அரசல் புரசலாக தெரியவந்தது. இதனால் 2 பேரும் பள்ளியில் இருந்து படிப்பை நிறுத்திவிட்டனர். இதற்கிடையே அந்த சிறுமி கர்ப்பமானார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார். உடனே காதலன் உனனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதியளித்தார். அதன்பின்னர் அந்த சிறுவன் சிறுமியை தனது அக்காள் ஊரான விழுப்புரம் பனக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
அப்போது சிறுவன் தனது அக்காளிடம் நான் இவளை திருமணம் செய்ய உள்ளேன். எனவே பத்திரமாக பாதுகாக்கும்படி கூறிவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார். தனியாக இருந்த சிறுமியிடம் சிறுவனின் அக்காள் உனக்கு எனது தம்பியுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. நீ எப்படி கர்ப்பமானாய் என்று கேட்டுள்ளார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த விபரத்தை கண்ணீர் மல்க அந்த சிறுமி கூறினார். சம்பவம் நடந்த இடம் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால் உடனடியாக அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது மேற்கண்ட தகவலை தெரிவித்தார். அதன்பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். சிறுமி காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
- இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார்.
- குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டார்.
கடலுார்:
கடலுார், திரு வந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவரு க்கும், 14 வயது சிறுமி க்கும் பள்ளியில் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. தற்போது இருவருமே பாதியில் படிப்பை நிறுத்திவிட்டனர். பின்னர் இருவரும் தனிமையில் உல்லா சமாக இருந்ததால், தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து ள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவி னர்கள் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், குழந்தைகள் நல அலு வலர்கள் மூலம் சிறுமி மீட்கப்பட்டு, கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, 16 வயது சிறுவனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
- சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிறுமியின் தாய் உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
- சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் பக்கத்து வீட்டிலுள்ள கூலித்தொழிலாளி முருகன் என்பது தெரிய வந்துள்ளது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் முருகன்(வயது 32).கூலித் தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.இந்தநிலையில் இவருடைய பக்கத்து வீட்டில் உள்ள 16 வயது சிறுமியிடம் முருகன் ஆசை வார்த்தைகள் கூறி,கடந்த 6 மாதங்களாக கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துள்ளார்.இந்தநிலையில் சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சிறுமியின் தாய் உடுமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அது குறித்து விசாரித்தபோது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் பக்கத்து வீட்டிலுள்ள கூலித்தொழிலாளி முருகன் என்பது தெரிய வந்துள்ளது.இதனையடுத்து சிறுமியின் தாய் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சிறுமியை கர்ப்பம் ஆக்கியவர் கைது செய்யப்பட்டார்.
- உசிலம்பட்டி சமூக நல அதிகாரி விருமாயி சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
மதுரை
மதுரை மாவட்டம் பேரையூர், நரியம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர் (34). இவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த மாதம் திருமணம் செய்தார்.
இதற்கு அதே பகுதியில் வசிக்கும் மல்லிகா, அவரது கணவர் ராஜா உடந்தையாக இருந்தனர். திருமணத்துக்குப் பிறகு அய்யர், சிறுமியின் எதிர்ப்பையும் மீறி பல்வேறு தருணங்களில் பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார்.
இது குறித்து உசிலம்பட்டி சமூக நல அதிகாரி விருமாயி சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர் அய்யரை கைது செய்தனர்.
- திருத்தங்கல்லில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் 16 வயது சிறுமி கர்ப்பமானார்.
- இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் அந்த சிறுமிைய தேராம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றார்.
இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் சிறுமியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த டாக்டர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த வைரமுத்து (வயது 22), பரமசிவம் (44) ஆகிய 2 பேர் 2 வருடங்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இதில் சிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்