என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாட்ஜூக்கு அழைத்து சென்று உல்லாசம்: சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்
- அஜித்குமார் சென்னையில் செயல்படும் ஒரு பேக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 4-ந் தேதி சொந்த கிராமத்திற்கு வந்தார்.
திருவாடானை:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 சிறுமி பிளஸ்-1 வரை படித்துள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கி முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் தொத்தார் கோட்டையை சேர்ந்த உறவினர் ராஜேந்திரன் மகன் அஜித்குமார் (வயது25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அஜித்குமார் சென்னையில் செயல்படும் ஒரு பேக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரும், சிறுமியும் 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்குமார் அடிக்கடி சிறுமியை சந்தித்து வந்தார். அப்போது சென்னை திருவான்மியூரில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்று சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 4-ந் தேதி சொந்த கிராமத்திற்கு வந்தார்.
பின்னர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் காளையார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருவாடானை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்