என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரேசன் பொருள் வாங்க முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள்- நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் கோரிக்கை
சென்னை:
திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். தற்போது தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலையின்றி தவிக்கிறார்கள். வெளி மாவட்டங்களை சேர்ந்த இவர்களுக்கு ரேசன் கார்டுகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ளது. இப்போது அரசு ரூ.1000 நிவாரண உதவி மற்றும் இலவச பொருட்கள் வழங்குகிறது.
ஆனால் இந்த தொழிலாளர்கள் தங்கள் ரேசன் கார்டுகள் மூலம் திருப்பூரில் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த மாதிரி சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அந்த மாவட்ட கலெக்டர் விஜயசந்திரனிடம் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவர்களை கணக்கெடுத்து அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்வதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்