என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
துபாயில் தவிக்கும் தமிழக மீனவர்களை அழைத்து வரவேண்டும்: மத்திய-மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 9 பேர், தஞ்சை மாவட்ட மீனவர்கள் 3 பேர், புதுச்சேரி மீனவர் ஒருவர் என 13 மீனவர்கள் மீன்பிடி ஒப்பந்த தொழிலாளர்களாக துபாய் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீன்பிடி தொழிலுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் துபாயில் மீன்பிடி ஒப்பந்தக் கூலியாக சென்ற 13 தமிழக மீனவர்களும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக வாட்ஸ்-அப் வழியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்திய பணம் ஒரு லட்சத்திற்கு இணையாக திரகம் செலுத்தினால் மட்டுமே ஊருக்குப் போக முடியும் என தெரிவித்து படகு உரிமையாளர் பாஸ்போர்ட்டை கொடுக்க மறுத்துள்ளார்.
இது குறித்து கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, துபாயில் இருந்து 13 மீனவர்களையும் மீட்க மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்