என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவேன் - ஆசிரியையை மிரட்டிய மீன் வியாபாரி கைது
Byமாலை மலர்16 March 2020 5:15 AM GMT (Updated: 16 March 2020 5:16 AM GMT)
சாத்தான்குளத்தில் ஆசிரியைக்கு காதல் தொல்லை கொடுத்த மீன் வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தச்சமொழி நாடார் தெருவை சேர்ந்தவர் கோவில் பிச்சை. இவரது மனைவி செல்வி(வயது 49). இவர்களது மகள் அஜிந்தா அப்பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் மகன் செல்வக்குமார்(32). இவர் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் செல்வக்குமார் கடந்த சில நாட்களாக அஜிந்தாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது காதலை அஜிந்தா ஏற்க மறுத்தாலும், தொடர்ந்து அவருக்கு செல்வக்குமார் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அஜிந்தா தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் செல்வக்குமாரை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார், திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று செல்வியை மிரட்டியுள்ளார். உடனே செல்வி இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.
சாத்தான்குளம் தச்சமொழி நாடார் தெருவை சேர்ந்தவர் கோவில் பிச்சை. இவரது மனைவி செல்வி(வயது 49). இவர்களது மகள் அஜிந்தா அப்பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஞானராஜ் மகன் செல்வக்குமார்(32). இவர் அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் செல்வக்குமார் கடந்த சில நாட்களாக அஜிந்தாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது காதலை அஜிந்தா ஏற்க மறுத்தாலும், தொடர்ந்து அவருக்கு செல்வக்குமார் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அஜிந்தா தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் செல்வக்குமாரை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த செல்வக்குமார், திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று செல்வியை மிரட்டியுள்ளார். உடனே செல்வி இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X