என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது
Byமாலை மலர்28 Feb 2020 12:56 PM GMT (Updated: 28 Feb 2020 12:56 PM GMT)
நாகர்கோவிலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட 16 வயது பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணை தனது வீட்டிற்க அழைத்துவந்தார். அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை மிரட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். இந்த தகவல் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தா குமாரி, சப்-இன்ஸ் பெக்டர் மேரிதங்கம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அந்த சிறுவன் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் காப்பகத்தில் வைக்கப்பட்டு உள்ளார். அந்த சிறுவனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X