என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கழிவறை கோப்பையில் சிக்கிய வாலிபரின் கை - 1 மணி நேரம் போராடிய தீயணைப்பு படையினர்
Byமாலை மலர்24 Feb 2020 10:28 AM GMT (Updated: 24 Feb 2020 11:48 AM GMT)
கழிவறை கோப்பையில் தவறி விழுந்த கார் சாவியை எடுக்க முயன்ற வாலிபரின் கை சிக்கியதையடுத்து தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரம் போராடி அவரை மீட்டனர்.
மதுரை:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிமாறன் (வயது 29). காண்டிராக்டர்.
இவர், உறவினருடன் காரில் மதுரை வந்தார். மதுரை பெத்தானியாபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பினார். பின்னர் அங்குள்ள கழிவறைக்கு சென்றார்.
அப்போது மணிமாறனின் சட்டைப்பையில் இருந்த கார் சாவி தவறி கழிவறை கோப்பையில் விழுந்தது. இதில் பதட்டமடைந்த அவர் உடனடியாக கோப்பைக்குள் கையை விட்டு சாவியை எடுக்க முயன்றார்.
ஆனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. கை சிக்கிக்கொண்டது. இவரது அலறல் சத்தம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வாலிபரின் கையை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் பலனளிக்கவில்லை.
இதையடுத்து மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் மீட்புப்பணித்துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், சுத்தியலால் கோப்பையை உடைத்து மணிமாறனின் கையில் காயம் ஏற்படாதபடி அவரை மீட்டனர். கோப்பைக்குள் விழுந்த சாவியை எடுக்க முடியாமல் 2 மணி நேரம் போராடிய மணிமாறன் மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் மதுரை பைபாஸ் ரோடு பெட்ரோல் பங்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிமாறன் (வயது 29). காண்டிராக்டர்.
இவர், உறவினருடன் காரில் மதுரை வந்தார். மதுரை பெத்தானியாபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பினார். பின்னர் அங்குள்ள கழிவறைக்கு சென்றார்.
அப்போது மணிமாறனின் சட்டைப்பையில் இருந்த கார் சாவி தவறி கழிவறை கோப்பையில் விழுந்தது. இதில் பதட்டமடைந்த அவர் உடனடியாக கோப்பைக்குள் கையை விட்டு சாவியை எடுக்க முயன்றார்.
ஆனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை. கை சிக்கிக்கொண்டது. இவரது அலறல் சத்தம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வாலிபரின் கையை எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் பலனளிக்கவில்லை.
இதையடுத்து மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் மீட்புப்பணித்துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், சுத்தியலால் கோப்பையை உடைத்து மணிமாறனின் கையில் காயம் ஏற்படாதபடி அவரை மீட்டனர். கோப்பைக்குள் விழுந்த சாவியை எடுக்க முடியாமல் 2 மணி நேரம் போராடிய மணிமாறன் மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் மதுரை பைபாஸ் ரோடு பெட்ரோல் பங்க்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X