என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை ரெயிலில் ஊதுபுகையிலை கடத்தல்- 4 அசாம் வாலிபர்கள் கைது
Byமாலை மலர்18 Feb 2020 8:41 AM GMT (Updated: 18 Feb 2020 8:41 AM GMT)
கோவை ரெயிலில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஊதுபுகையிலையை பறிமுதல் செய்த போலீசார் 4 அசாம் வாலிபர்களை கைது செய்தனர்.
கோவை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் கிரிஷ்குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையில் இருந்து வந்த ரெயிலில் பயணிகள் இறங்கினர். அதில் சுற்றுலா பேக்குடன் 4 வாலிபர்கள் சந்தேகப்படும்படி இறங்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 40 கிலோ ஊதுபுகையிலை இருந்தது. இந்த வகை புகையிலை 1 கிலோ ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை புகையிலையை விற்பனை செய்ய முன் அனுமதி பெற வேண்டும். இது தவிர இதற்கு ஜி.எஸ்.டி. உண்டு.
விசாரணையில் ஊது புகையிலையை கடத்தி வந்தவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரகுல் இஸ்லம் (வயது 29), அகமது அசீர் (28), அமீர் (31), முகமது நபில் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
ஊதுபுகையிலையை பறிமுதல் செய்த போலீசார் கூறும்போது, பழைய சினிமாவில் ராஜாக்கள் பைப் வழியே புகையை இழுத்து ஊதும் புகையிலையைத்தான் ஊது புகையிலை என்பார்கள்.
தற்போது சில செல்வந்தவர்கள் பைப் வழியே இந்த ஊதுபுகையிலையை பயன்படுத்தி வருகிறார்கள் என்றனர். ஊது புகையிலையை கடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்து வரி ஏய்வு செய்ததாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் கிரிஷ்குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையில் இருந்து வந்த ரெயிலில் பயணிகள் இறங்கினர். அதில் சுற்றுலா பேக்குடன் 4 வாலிபர்கள் சந்தேகப்படும்படி இறங்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 40 கிலோ ஊதுபுகையிலை இருந்தது. இந்த வகை புகையிலை 1 கிலோ ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை புகையிலையை விற்பனை செய்ய முன் அனுமதி பெற வேண்டும். இது தவிர இதற்கு ஜி.எஸ்.டி. உண்டு.
விசாரணையில் ஊது புகையிலையை கடத்தி வந்தவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரகுல் இஸ்லம் (வயது 29), அகமது அசீர் (28), அமீர் (31), முகமது நபில் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
ஊதுபுகையிலையை பறிமுதல் செய்த போலீசார் கூறும்போது, பழைய சினிமாவில் ராஜாக்கள் பைப் வழியே புகையை இழுத்து ஊதும் புகையிலையைத்தான் ஊது புகையிலை என்பார்கள்.
தற்போது சில செல்வந்தவர்கள் பைப் வழியே இந்த ஊதுபுகையிலையை பயன்படுத்தி வருகிறார்கள் என்றனர். ஊது புகையிலையை கடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்து வரி ஏய்வு செய்ததாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X