என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுபோட்டு கிராம மக்கள் போராட்டம்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே பேரணாம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லகுப்பம் ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட கிராமசபா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் (நேற்று) நடக்க இருந்த கிராமசபா கூட்டத்தை நடத்தக்கூடாது என்று கூறி, அங்கிருந்த ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் என்பவரை வெளியேற் றிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம இளைஞர்கள் பூட்டு போட்டு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி வட்டவழங்கல் அதிகாரி குமார், வருவாய் ஆய்வாளர் புகழேந்தி, பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தங்களின் புகாரை எழுத்து மூலமாக தந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்களும், இளைஞர்களும் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்