என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரத்தில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: 13 பயணிகள் படுகாயம்
Byமாலை மலர்7 Dec 2019 4:44 AM GMT (Updated: 7 Dec 2019 4:44 AM GMT)
தாராபுரத்தில் இன்று காலை பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம்:
தேனியில் இருந்து திருப்பூருக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை செல்வராஜ் (வயது 45) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக அன்னக்கொடி (53) இருந்தார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பஸ் இன்று காலை 6 மணியளவில் தாராபுரம் புறவழிச்சாலையில் வந்தது. அப்போது எதிரே தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு லாரி சென்றது. அந்த லாரியை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டினார்.
இந்த விபத்தில் ஐஸ்வர்யா நகரில் வந்தபோது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு காயம் அடைந்தவர்களை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த பஸ் டிரைவர் செல்வராஜ், லாரி டிரைவர் அன்னக்கொடி மற்றும் பயணிகள் மகுடீஸ்வரன் (46) சந்தோஷ் (49), அருண்குமார் (28), மாலதி (23), முருகேசன் (76), திருநாவுக்கரசு (46), காளிதாசன் (32)ராமன் (60), ராஜாமணி (63), கண்ணதாசன் (32), பழனியப்பன் (60) ஆகிய 13 பேருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனியில் இருந்து திருப்பூருக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை செல்வராஜ் (வயது 45) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக அன்னக்கொடி (53) இருந்தார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பஸ் இன்று காலை 6 மணியளவில் தாராபுரம் புறவழிச்சாலையில் வந்தது. அப்போது எதிரே தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு லாரி சென்றது. அந்த லாரியை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டினார்.
இந்த விபத்தில் ஐஸ்வர்யா நகரில் வந்தபோது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு காயம் அடைந்தவர்களை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த பஸ் டிரைவர் செல்வராஜ், லாரி டிரைவர் அன்னக்கொடி மற்றும் பயணிகள் மகுடீஸ்வரன் (46) சந்தோஷ் (49), அருண்குமார் (28), மாலதி (23), முருகேசன் (76), திருநாவுக்கரசு (46), காளிதாசன் (32)ராமன் (60), ராஜாமணி (63), கண்ணதாசன் (32), பழனியப்பன் (60) ஆகிய 13 பேருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X