search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாராபுரம் விபத்து"

    தாராபுரம் அருகே பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துள்ளானதில் 3 பெண்கள் பலியானார்கள்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது.

    இந்த கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி, கோடங்கிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அவர்கள் தினமும் காலையில் வேனில் வேலைக்கு வருவது வழக்கம். அது போல் இன்று காலை ஒரு வேனில் ஆண்கள், பெண்கள் என 38 பேர் வேலைக்கு வந்தனர்.

    இந்த வேன் தாராபுரம்- ஒட்டன் சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது ஒரு கல் மீது ஏறி வேனின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் வேன் நடுரோட்டில் தலை குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

    அவர்களில் கோடங்கிபட்டியை சேர்ந்த பாப்பாத்தி (50), ரேவதி (37) புளியம்பட்டி குமரன் மனைவி பார்வதி (38) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

    வேனில் இருந்த 36 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 6 பேர் பழனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    தாராபுரம் அருகே வேன் நடுரோட்டில் கவிழ்ந்து 2 பெண்கள் பலியானார்கள். 21 பேர் காயம் அடைந்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது.

    இந்த கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டம் புளியம்பட்டி, கோம்பயம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அவர்கள் தினமும் காலையில் வேனில் வேலைக்கு வருவது வழக்கம். அது போல் இன்று காலை ஒரு வேனில் ஆண்கள், பெண்கள் என 23 பேர் வேலைக்கு வந்தனர்.

    இந்த வேன் தாராபுரம்- ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது ஒரு கல் மீது ஏறி வேனின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் வேன் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

    அவர்களில் கோம்பயம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி (50), புளியம்பட்டி குமரன் மனைவி பார்வதி (38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள்.

    வேனில் இருந்த 21 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

    தாராபுரம் அருகே சுற்றுலா வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெரியலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் (27). கேரள மாநிலம் மூணாரை சேர்ந்தவர் ரெஜிபிலிப் (28). இவர்கள் 3 பேரும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தங்கி இருந்து அங்குள்ள காற்றாலையில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இன்று காலை இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டிச் சென்றார். செட்டிப்பாளையம் அருகே சென்ற போது பொள்ளாச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த தங்கவேல், ரெஜி பிலிப் ஆகியோர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×