search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் படுகாயம்"

    • பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை, உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    பல்லடம்:

    பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதேப்போல் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்ததும் பஸ் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஒரே நேரத்தில் 2 பஸ்களும் பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்றன.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் பஸ்களின் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின. 2 பேருந்துகளிலும் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக பல்லடம் பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    பல்லடம் பஸ் நிலையம் வழியாக திருப்பூர், கோவை, மதுரை , உடுமலை உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக நுழைவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தது.

    சமீபத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது அரசு பஸ்சின் படிக்கட்டு அருகே நின்ற பயணி ஒருவர் வாசல் வழியாக கீழே விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலியானார். அதேபோல் பயணிகள் சிலர் பஸ் மோதி காயமடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் இன்று விபத்துக்குள்ளான பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இயக்கப்பட்ட அரசு பஸ், நேரம் காரணமாக அதிவிரைவாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடனேயே பஸ்சில் பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். எனவே பல்லடம் பஸ் நிலையத்திற்குள் நுழையும் போது பஸ்களை மெதுவாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கிறது. மேலும் பல்லடம் வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடைபெறுகிறது. அங்கு காய்கறிகள் மற்றும் சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்து வதற்கு இடம் இல்லாமலும், பஸ்கள் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • செஞ்சியில் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • தனியார் பஸ் கர்நாடகா பஸ் மீது மோதி இடது பக்கம் திரும்பி அருகில் உள்ள போர்வெல் கடை மீது மோதி நின்றது.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு கர்நாடகா அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருவண்ணாமலை யிலிருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று செஞ்சி வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த 2 பஸ்களும் செஞ்சிநகரம் திண்டிவனம் சாலையில் பி.எஸ்என்.எல்அலுவலகம் எதிரே வரும்போது ஒன்றுக்கு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தனியார் பஸ் கர்நாடகா பஸ் மீது மோதி இடது பக்கம் திரும்பி அருகில் உள்ள போர்வெல் கடை மீது மோதி நின்றது. இதனால் கடையின் முன் பகுதி சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த கலீல் அகமத் (வயது 25) பெங்களூர் கர்நாடகா பஸ் டிரைவர் ஓம் சரவணபவன் (51), திருவண்ணாமலையை சேர்ந்த சுரேஷ் (32) தேவனூரை சேர்ந்த கங்காதரன் (22), விஜி, அர்ஜுனன், ராஜேஷ் குமார், சசிகாந்தன் அயோத்தி உத்திரகுமார், கெங்கைஅம்மாள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக செஞ்சி , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×