search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவொற்றியூரில் ஹெராயின் போதைப்பொருளுடன் மாணவர் உள்பட 6 பேர் கைது

    திருவொற்றியூரில் ஹெராயின் போதைப்பொருளுடன் மாணவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் போலீசார் நேற்று இரவு எண்ணூர் விரைவுச் சாலை ஒண்டிகுப்பம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கு இடமாக இருந்த 6 பேரை பிடித்து சோதனையிட்டனர்.

    அப்போது அவர்களிடம் தடை செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருந்தது.

    விசாரணையில் அவர்கள் சூளைமேடு பகுதியை சேர்ந்த ஆகாஷ், கல்லூரி மாணவர் தாமோதரன், குன்றத்தூரை சேர்ந்த வெங்கடேசபெருமாள், ராயபுரத்தை சேர்ந்த ரூபாமேரி, வடபழனியை சேர்ந்த ஜெனி மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் என்பதும் தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து 28 பாக்கெட் ஹெராயின், 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 6 பேரும் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடி விட்டு காரில் திரும்பி வரும்போது ஹெராயின் பாக்கெட்டை வாங்கி வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×