search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி மைதிலி.
    X
    மாணவி மைதிலி.

    திருவாரூரில் மத்திய பல்கலைக்கழக மாணவி விடுதியில் தூக்கில் தற்கொலை

    திருவாரூரில் உள்ள தமிழ் நாடு மத்திய பல்கலைக் கழக மாணவி விடுதியில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முருகன் மகள் மைதிலி (வயது 23) இரண்டாம் ஆண்டு ஒருங்கிணைந்த பி.எஸ்சி. பி.எட். படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வகுப்புக்கு சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பிய மைதிலி தனது தோழிகள் உள்பட யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்தார். தோழிகள் விசாரித்தபோது ஒன்றும் இல்லை என்று கூறி விட்டார்.

    நேற்று இரவு உணவு சாப்பிட மைதிலி வராத நிலையில் தொடர்ந்து அவரது அறைக்கு சக தோழிகள் சென்று பார்த்தனர். அப்போது மைதிலி தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

    மேலும் பல்கலைக்கழகப் பொறுப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நன்னிலம் போலீசார் தற்கொலை செய்துகொண்ட மைதிலியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மைதிலியின் நண்பர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மைதிலி காதல் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் முதல் கட்ட விசாரணை நடக்கிறது.

    ஓசூரில் உள்ள மைதிலியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுக்கப்பட்டு பெற்றோர்கள் திருவாரூருக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

    பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×