என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடி வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து நகைகள் திருடியதாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள சொக்கப்பழங்கரை பகுதியை சேர்ந்த பிச்சை மகன் மாரித்துரை (வயது20), அதே பகுதியை சேர்ந்த சிவபெருமான் மகன் முத்துதினேஷ் (20) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் திருச்செந்தூர் அருகில் உள்ள சேதுகுவாய்த்தான் பகுதியை சேர்ந்த விஜயராஜ் மகன் சதீஷ் (21) என்பவர் பழனி அடுத்துள்ள சத்திரப்பட்டியில் நடந்து சென்ற ஒருவரிடம் ரூ.3 ஆயிரம் வழிப்பறி செய்தார்.
இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இவர்களது குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரை செய்தார்.
கலெக்டர் உத்தரவை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்