search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவையில் மாணவியை 6 மாதமாக கற்பழித்த 2 பெண்டாட்டிக்காரர் கைது

    புதுவையில் 9-ம் வகுப்பு மாணவியை 6 மாதமாக கற்பழித்த 2 பெண்டாட்டிக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 32). பால்வண்டி டிரைவராக இருந்து வருகிறார். மேலும் வீடு, வீடாக சென்று பால் வழங்குவதும் வழக்கம்.

    இவர் முதலியார்பேட்டை பகுதியில் பால் சப்ளை செய்து வந்தார். இந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் அலெக்சுக்கு பழக்கம் ஏற்பட்டது. 14 வயதான அந்த மாணவியின் பெற்றோர் பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லை.

    எனவே மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருப்பார். இந்த நேரத்தில் அலெக்ஸ் மாணவியை சந்தித்து பேசி வந்தார். அப்போது ஆசை வார்த்தை கூறி மாணவியை அலெக்ஸ் கற்பழித்தார்.

    அந்த நேரத்தில் செல்போனில் அதை படம் பிடித்தார். மேலும் இந்த படத்தை காட்டி தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார். அந்த மாணவி வீட்டில் தனியாக இருப்பதையும், அலெக்ஸ் அடிக்கடி வீட்டுக்கு வருவதையும் பக்கத்து வீட்டினர் பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி மாணவியின் தாயாரிடம் சொன்னார்கள்.

    நேற்று அதேபோல அலெக்ஸ் மாணவியை சந்திக்க வீட்டுக்கு வந்தார். இதுபற்றி அவரது தாயாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் வந்து பார்த்தபோது இருவரும் வீட்டுக்குள் தவறான முறையில் இருந்தனர்.

    உடனே தாயார் கூச்சலிட்டார். அவரும் மற்றவர்களும் சேர்ந்து அலெக்சை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் (போக்சோ) படி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    அலெக்சுக்கு ஏற்கனவே 2 மனைவிகளும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவ்வாறு இருந்தும் இந்த தவறான செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
    Next Story
    ×